பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 தமிழர் நாட்டுப் பாடல்கள்

ஒன்றாம் வயதில் ஒக்கப் பணி பூண்டு இரண்டாம் வயதில் ரத்ன மணி ஊஞ்சலிட்டு மூன்றாம் வயதில் முத்தால லங்கரித்து நான்காம் வயதில் நடக்கப் பணி பூண்டு பத்துப் படித்துப் பரீட்சை எல்லாம் தான் எழுதி பாண்டித் துரைராசா பகல் உண்டு கைகழுவி தாம் பூலம் தரித்து சகுனம் பார்த்து சைக்கிளேறி கச்சேரி போயி கமலப்பூப் பாண்டியரும் கோர்ட்டாரு எதிரில் குரிச்சி மேல் உட்கார்ந்து ஜட்ஜு துரைகளுடன் சரிவழக்குப் பேசையிலே புத்தகமும் கையுமாய் பேச்சுரைக்கும் வேளையிலே கண்டு மகிழ்ந்தார்கள் எங்க கமலப்பூ ராசாவை பார்த்து மகிழ்ந்தார்கள் எங்க பாண்டித் துரைராசாவை பெண்ணுக் கிசைந்த புண்ணியர்தான் என்று சொல்லி கன்னிக் கிசைந்த கணவர்தான் என்று சொல்லி மங்கைக் கிசைந்த மணவாளர் என்று சொல்லி நங்கைக் கிசைந்த நாயகர்தான் என்று சொல்லி வலிய அவர் பேசி வந்தார் வரிசையுடன் பெரிய இடந்தானென்று பெண் தாரேன் என்று வந்தார் வாருங்கள் என்றார் எங்கள் அப்பா வரிசை மிகவுடையார்