பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம் 279

ஆமென்றான் எங்களம்மான் அன்பு மிகவுடையான் பவழ வர்ணச் சமுக்காளம் பாண்டி மன்னர் போடுமென்றார் முத்து வர்ணச் சமுக்காளம் முடி மன்னர் போடுமென்றார் தங்கக் கிண்ணியிலே சந்தணமும் கொண்டு வந்தார். வெள்ளித் தாம்பாளத்தில் வெற்றிலையும் பாக்கும் வைத்தார் வந்த தொரு சங்கதியை வாய் திறந்து சொல்லுமென்றார் நாங்கள் வந்த சங்கதியை நல முடனே சொல்லுகிறேன் எங்கள் பொற் கொடிக்கு உங்கள் புத்திரரைக் கேட்டு வந்தோம் எங்கள் ஏந்திழைக்கு உங்கள் இந்திரரைக் கேட்டு வந்தோம் எங்கள் பைங்கிளிக்கு உங்கள் பாலகரைக் கேட்டு வந்தோம் கலியாணப் பேச்சு காதாரக் கேட்டு வந்தோம். சந்தோஷமாகிச் சரீரமெல்லாம் பூரித்து மைந்தருக்குக் கல்யாணம் மகிழ்ச்சியுடன் செய்வதற்கு பொருத்தமது பார்க்க புரோகிதரைத் தானழைத்து வந்த புரோகிதருக்கு மாம்பலகை போடு மென்றார் கூட வந்த புரோகிதருக்கு குரிச்சுகளும் போடுமென்றார் சோழி பரப்பிச் சொல்லு மென்றார் பஞ்சாங்கம் பாசி பரப்பிப் பாரு மென்றார் பஞ்சாங்கம் ஐந்து பொருத்தம் பொருந்திற்று ஏந்திழைக்கு ஆறு பொருத்தம்