பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம் 281

இந்நில மெல்லாம் விளங்க இன்பமாய் வாழ்ந்திருங்கள் ஆயுசு தீர்க்கமுடன் அம்மனுட தன்னருளால் நாயகனும், நாயகியும் நலமாக வாழ்ந்திருங்கள் தலைப்பிள்ளை ஆண் பெறுவீர் தகப்பனார் பெயரிடுவீர் மறுபிள்ளை பெண் பெறுவீர் மாதா பெயரிடுவீர் பிள்ளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்திருங்கள் மக்கள் பதினாறும் பெற்று மங்கலமாய் வாழ்ந்திருங்கள் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி நலமுடனே எந்நாளும் ஞானமுடன் வாழ்ந்திடுவீர் போடுங்கள் பெண்கள் பொன்னார் மணிக்குலவை இன்னு மொரு குலவை இரு வாயும் பொன் சொரிய

குறிப்பு: 'பதினாறும் பெற்று' என்ற சொற்றொடருக்கு புதிய பொருள் கூறப்படுகிறது. 'பதினாறு செல்வங்கள்' என்று பொருள் கூறி, பதினாறு செல்வங்களின் பட்டியலும் கூறப்படுகிறது. நாட்டார் நம்பிக்கையில் 16 என்பது மக்களைத்தான் குறிப்பிடும். பிள்ளைப்பதினாறு, மக்கள் பதினாறு என்ற சொற்றொடர்கள் இதனைத் தொடர்பாக்கும்.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.

எங்கிருந்து வாச்சாளோ?

திருமண விழாவின் போது மணமகன் உறவினர் ஒரு கட்சியாகவும், மணப்பெண் உறவினர் மற்றோர் கட்சியாகவும் பிரிந்து பாட்டுப் போட்டி தொடங்குவார்கள். மணமகனின்