பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

தமிழர் நாட்டுப் பாடல்கள்


பத்துப் பொருத்தம்
பாங்குடன் கேட்டு
முறைமைகள் ஆகுதென்று
முறையாக வந்து
பிரியமுடன் வெற்றிலை
பாக்கு பிடித்து
ஏழு தீர்த்தம்
இசைந்திடும் நீரும்
மேளம் முழங்க
விளாவிய வாழ்த்து
செங்கைச் சோற்றை
சீக்கதில் கழித்தார்
வர்ணப்பட்டால்
வஸ்திரம் தன்னை
நெருங்கக் கொய்து
நேராய் உடுத்தி
அன்ன முப்பழமும்
ஆநெய்ப் பாலும்
மன்னவர் உடனே
வந்தவர் உடனே
வாசல் கிளறி
மதிப்புடன் கூடி
வெற்றிலை மடக்கி
விரும்பியோர்க் கெல்லாம்
கணபதி தன்னை
கருத்துடன் நாடி
அருகது சூடி
அருளது புரிந்திட
முளரி மெச்சிட,
முகமது விளங்கிட
களரி வைத்துக்
கங்கணம் கட்டினார்
குழவிக்குக் கங்கணம்
குணமுடன் தரித்து
கொப்பேறி கொட்டி
குல தேவதையைத் தானழைத்து
செப்பமுடன் மன்னவர்க்குத்
திருநீற்றுக் காப்பணிந்து