பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 தமிழர் நாட்டுப் பாடல்கள் அஷ்ட திக்கும் தானதிர அடியுமென்றார் பேரணியை அன்ன நடையோர்கள் அருமைப் பெரியோர்கள் பொன்னி வலக்கையாலே பேழை முடி ஏந்தி நின்று வண்ண வண்ணக் காட்சியர்க்கு வரிசை கொண்டு வந்தோமென்று நாட்டிலுள்ள சீர் சிறப்பை நாட்டினார் முன்னிலையில் கண்டு மகிழ்ந்தார்கள் கண்குளிர யாவரும் பூட்டு மென்றார் தாலியைப் பெண்ணாள் திருக்கழுத்தில் ஊட்டு மென்றார் சாதம் உடுத்து மென்றார் பட்டாடை சத்துச் சரப்பளியும், தங்கம் வெள்ளி பொன் நகையும் மாணிக்கம் முத்து வைடூரியம் திருப்பூட்டி ஆணிப் பொன்னாபரணம் அலங்கரித்துக் குலம் கோதி அன்ன மயிலியர்க்கு அழகு கொண்டை முடித்து விட்டு பொன் பூட்ட வந்தோர்க்குப் பூதக்கலம் அனுப்பிவைத்து அன்பாக மாங்கல்யம் அடவாகவே கொடுத்து அத்தியார் சுத்தப்பட்டு ஆனந்த நாராயணப்பாட்டு மெச்கம் கலி வர்ணம் மேகவர்ணம் துவர்ணம் பச்சை வர்ணம், பவளவர்ணம் பலவர்ணக் கண்டாங்கி மேலான வெள்ளைப்பட்டு மேல் கட்டுங்கட்டி கட்டியே இருக்கும் கணபதி வாசலிலே