பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326. தமிழர் நாட்டுப் பாடல்கள்

         விவாகரத்து
  கணவன் அவளை விவாகரத்து செய்ய முற்பட்டு விட்டான். ஆனால் அவள் கணவனைப் பிரிய உடன்படவில்லை. அவளுடைய குழந்தையையும் அவன் அவளிடமிருந்து பிரிக்கும் போது கணவனுடன் வாழாத தன்னைச் சவமாக எண்ணுகிறாள். ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் குழந்தையையாவது தன்னிடம் விட்டு விடும்படி பஞ்சாயத்தாரி டம் கெஞ்சிக் கேட்கிறாள்.

பட்டுத் தலையாணி பாட்ட முடு கச்சேரி பட்டு நெறங் கொலைஞ்சேன்-நான் பாட்ட முட்டு சீரெளந்தேன் புள்ளித் தலகாணி பொறந்த இடம் கச்சேரி புள்ளி நெறங் கொலைஞ்சேன்-நான் பொறந்த இடம் சீரழிஞ்சேன் சங்கு மணியடிக்கும் சர்க்காரு என் தொரையே சாந்திருக்கும் போலிசாரே சர்க்காரு வக்கீலே-நான் தந்ததை வாங்கிக்கிட்டு- என் சவத்தையும் விட்டுடுங்கோ குண்டு மணியடிக்கும் கோர்ட்டாரு என் தொரையே-நான் குடுத்ததை வாங்கிக்கிட்டு-என் கொளந்தையை விட்டிடுங்க

வட்டார வழக்கு:பாட்டம்-சீவனாம்சம்.

சேகரித்தவர்: இடம்: சடையப்பன் அரூர்


   சித்தியின் கொடுமை
 அவளுடைய அம்மா தன் பெண்ணை அனாதைபோல் விட்டு விட்டு இறந்து விட்டாள். தந்தை இருக்கிறார். தந்தை தாய்க்கு ஈடாக முடியுமா? தாயில்லாப்பிள்ளை, பேச வாயில்லாப்பிள்ளை என்று சும்மாவா சொல்கிறார்கள். அநேகமாக