பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குடும்பம் 327

சித்தி (அதாவது மாற்றாந்தாய்) கொடுமைக்காரியாக இருப்பதைப் போலவே அவளுக்கு வாய்த்த மாற்றாந்தாயும் அவளைக் கொடுமைப்படுத்துகிறாள். தானே வீட்டிற்கு அதிகாரியாக இருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்க எண்ணுகிறாள். உண்மையான அன்பு செலுத்தும் பெற்ற தாயாக இருந்தால் மகளை-மணம் செய்து கொடுக்கும் இடத்தைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டு மாப்பிள்ளையாகப் போகிறவனின் குண விசேஷங்களை அறிந்த பின்பே திருமணத்தை நடத்துவாள். ஆனால் அவளுடைய சித்தியோ நல்லெண்ணமில்லாதவளாதலால் அவளை ஒரு நற்குணமில்லாதவனும், நல்ல பழக்கங்கள் இல்லாதவனுமாகிய ஒருவனுக்கு மணம் செய்து வைத்து விடுகிறாள். மணமான பின்பு அவள் படும் துன்பங்களையும், இந்தத் திருமணத்திற்குக் காரணமாயிருந்த சித்தியின் கொடுமையையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

வெங்காயம் வெங்காயம் வதக்கி வச்ச வெங்காயம் செங்கோட்டை அத்தான் மாரு பெண் கேட்டு வந்தாக எங்க ஐயா இளராசா இல்லைண்ணு சொன்னாக எங்கம்மா சண்டாளி இருக்குன்னுஞ் சொன்னாளே

சேகரித்தவர்: இடம்: S.S.போத்தையா சிவகிரி,

                    நெல்லை 
                    மாவட்டம்.
      
       வெளி வேஷம்
கிரர்மத்துப் பெரிய மனிதர்கள்தான் சாதிப் பிரிவினையின் பாதுகாவலர்கள். உழைப்பவர்களிடையே சாதிப் பிரிவினைகளும், முரண்பாடுகளும் நீடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது நிலச் சுரண்டல் நீடிக்க அந்நிலைமைகள் அவசியம். கீழ்சாதிக்குள் கலப்புமணம் என்றால் சீறுவார்கள். சாதி பிரிவுகளுக்குள் காதல் என்றால் குமுறுவார்கள். மேல் சாதிப் பெண்ணோடு காதல் கொண்டு, மணந்து கொள்ள முயன்றவர்கனைக் கொலை செய்யவும்