பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344 தமிழர் நாட்டுப் பாடல்கள் கொடுமை எப்பொழுது ஆறும்? இளம் விதவை, துணையின்றி, துயரில் ஆழ்ந்திருக்கிறாள். சொத்துக்கு வாரிசாக மகன் பிறக்குமுன் அவள் கணவன் இறந்து போனான். பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அவள் அமங்கலி. பருவ இன்பம் அவளுக்கு நேர்வழியில் கிடைக்காது; குறுக்கு வழிகளில் செல்ல விடாமல் அவளது நேர்மை தடை போடுகிறது. இந்நிலையில் 'மரமாகவாவது, பூவாகவாவது பிறந்திருந்தால் மனிதர்கள் போற்றுவார்களே' என்று ஏங்குகிறாள் அவள். அவளுடைய கொடுமை எப்பொழுது ஆறும். விதவை மனத்தை பாரதியும் மற்ற சீர்திருத்தம் விரும்பிய தலைவர்களும் ஆதரித்திருந்த போதிலும் சமூக பழக்கவழக்கங்க ளும் பழமைப்பித்தும் அதனை இன்னும் மறுத்தே வருகின்றன. மாளிகையில் பூத்தது மரத்திலே பூத்திருந்தா மானுடர் அத்தனைபேர் மரமின்னு வெட்டுவாங்க மடமும் கட்டுவாங்க-இப்போ மானுடர் யாரும் மரமின்னு வெட்டவில்லை மடமும் கட்டவில்லை கும்பியிலே பூத்த நானு கொம்பிலே பூத்திருந்தா கூட்டத்தார் எல்லோரும் கொம்புன்னு வெட்டுவாங்க கோயிலும் கட்டுவாங்க-இப்போ கூட்டத்தார் எல்லோரும் கொம்புன்னு வெட்டல்லை கோயிலும் கட்டல்லை என்னுடைய வெங்கொடுமை எப்பத்தான் ஆறப்போகும். வட்டார வழக்கு: கும்பி-வயிறு. உதவியவர்: இடம்: செல்லம்மாள்: பொன்னேரிப்பட்டி, சேகரித்தவர்: சேலம் மாவட்டம். கு. சின்னப்ப பாரதி