பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

தமிழர் நாட்டுப் பாடல்கள்

                    களை எடுக்கும் பெண்களுக்கு 
                    காவலுக்கு வந்த சாமி, 
                    மலையோரம் கெணறு வெட்டி 
                    மயிலைக் காளை ரெண்டு கட்டி 
                    அத்தை மகன் ஒட்டும் தண்ணி 
                    அத்தனையும் சர்க்கரையே

உதவியவர்: இடம்: பொன்னுசாமி ஒலப்பாளையம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

களை எடுத்தல்-2

                  களை யெடுக்கும் பெரிய குளம் 
                  கணக்கெழுதும் ஆலமரம் 
                  கொத்தளக்கும் கொட்டாரம் 
                  குணமயிலைக் காணலியே
சேகரித்தவர்:
இடம்:
S.M.கார்க்கி
சிவகிரி

களை எடுத்தல்-3

                 களை யெடுக்கும் பெரிய குளம் 
                 கணக் கெழுதும் ஆலமரம் 
                 கொத்தடிக்கும் கொட்டாரம் 
                 கூறு வைக்கும் களத்து மேடு 
                 கண்ணாடி வளையல் போட்டு 
                 களை எடுக்க வந்த புள்ளே 
                 கண்ணாடி மின்னலிலே 
                 களை எடுப்புப் பிந்துதடி 
                 வெள்ளிப் புடி வளையல்-நல்ல 
                 விடலைப் பிள்ளை கை வளையல் 
                 சொல்லி அடிச்சவளை-தல்லா 
                 கழட்டு தில்ல நெல்களையை

உதவியவர்: இடம்: வாழ்நாய்க்கன் பாளையம், முத்துசாமி சேலம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி