பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
414

தமிழ்நாட்டுப்பாடல்கள்


ஏர்வாடி அல்லா
எனக்குத் துணை நீயே!

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
விளாத்திகுளம்,
நெல்லை மாவட்டம்.

ஏற்றப் பாட்டு-2

வாரும் பிள்ளையாரே!
வழிக்குத் துணையாக,
வழிக்குத் துணையாக!
எனக்குப் பயம் தீர,
மூத்த பிள்ளையாரே!
முன்னடக்க வேணும்
முன் நடந்தாயானால்,
மூனுடைப் பேன் தேங்காய் இளைய பிள்ளையாரே, எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்; என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்;
பயறு பலகாரம்
எள்ளுடன் துவரை;
கொள்ளுடன் பயறு
அரிசி கலந்து;
ஆயிரம் கலமாம்
துவரை கலந்து;
தொளாயிரம் கலமாம்
எள்ளு கலந்து;
எண்ணுறு கலமாம்
மொச்சை கலந்து;
முன்னூறு கலமாம்
மூங்கில் களைபோல;
முன்னூறு கரும்பு,
நாணல் தட்டை போல;
தானுறு கரும்பாம்
அகத்திக் கம்பு போல;
ஐநூறு கரும்பாம்.