பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

421

உழவும் தொழிலும்


உழவர்களும் உழத்தியரும் பாடுவார்கள். இடையிடையே கலந்துவரும் தொடர்ச்சியான பொருள் வருமாறு பாடல்கள் அமைந்திரா.

அறுவடைப் பாடல்கள்

(பெண்)

கோடை கருதறுப் பே கொடிக்காலே சூழ்ந்திருப்பே நாளக் கருதறுப்பே நானும் வந்தாலாகாதோ!

(ஆண்)

கஞ்சிக் கலயம் கொண்டு கருதறுக்க போற புள்ளா காக்காய் அலம்புதடி கருத்தப் புள்ளா உங்கலயம்

(பெண்)

நெல்லுக் கதிரானேன் நேத்தறுத்த தாளானேன் நேத்து வந்த தோழனுக்கு நேரம் தெரியாதோ!

(ஆண்)

கருதறுப்பில கங்காணத்திலே கமகமங்குது குமுகுமுங்குது கன்னத்து மஞ்சள் என்னைப்பகட்டுது
முன்னே போற பொண்ணே! உன்னைத் தாண்டி பொண்ணே

(பெண்)

ஊரோரம் கதிரறுத்து
உரலுப் போல கட்டுக்கட்டி
தூக்கி விடும் கொத்தனாரே தூரகளம் போய்ச்சேர கருதறுத்துக் கிறுகிறுத்து கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி