பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவும் தொழிலும் 433 உமட்டியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உப்புக் காய்ச்சும் தொழில் தமிழ் நாட்டு புராதனத் தொழில்களில் ஒன்று.

  இத் தொழில் மிகவும் கடினமானது. அளத்தில் நீரில் உறைந்திருக்கும் உப்பு காலைக்கீறி வேதனையை உண்டாக்கும். கால்களில் புண்கள் தோன்றும். பழக்கமில்லாதவர்கள் வேலைக்கு வந்தால் மிகவும் துன்பப்படுவார்கள். தூத்துக்குடி அருகிலுள்ள உப்பளங்களுக்குப் பஞ்ச காலத்தில் கோயில் பட்டி தாலுக்காவிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமாக வேலைக்கு வருவார்கள். வேலை செய்யத் தெரியாமல் அவர்கள் திண்டாடும் பொழுது வேலையில் பழக்கமுள்ள பெண்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். 'கரண்டையளவு தண்ணீர் கழுத்தளவு தண்ணீராக இருக்கிறதா?’ என்று பெண்கள் கேட்பார்கள். புதிதாக வந்த இளைஞர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். பாட்டும் சிரிப்பும் கலந்து வேலையைத் தடைபடுத்தும். அப்பொழுது கங்காணிகள் அதட்டுவார்கள். கங்காணி தலை மறைந்ததும், வேலையின் கடுமையை மறக்க மீண்டும் பாட்டுப்பாடுவார்கள். இடையிடையே காதல் அரும் பும். கடுமையான வேலையும், கொடுரமான சுரண்டலும், மனிதப் பண்பை மாய்த்துவிட முடிவதில்லை. கட்டாந்தரையி லும் ஒரு சொட்டு மழை பெய்தாலும் பசும்புல் தலை தூக்குவதில்லையா? அது போல் பஞ்சம், வாட்ட, அளத்தில் கொத்து வேலை செய்த போதிலும், இளைஞர்களுக்கிடையே, அன்பும், பரிவும் துளிர்த்துக் காதலாக வளருகிறது.

உப்பளப் பாடல்

  காரப்பாடு அளத்திலேயும் 
  கழுத்து அளவு தண்ணிலே 
  நீந்தத் தெரியாம 
  நிற்கிறாளே என் தோழி 
  கங்காணி கோவத்துக் கோ 
  கடல் தண்ணி ஏத்தத்துக்கோ 
  நம்மளோட கோபத்துக்கோ 
  நடத்திட்டாலும் குத்தமில்லே 
  சம்பங்கி எண்ணெய் தேய்த்து 
  சாட்டைபோல முடிவளர்த்து