பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



447

உழவும் தொழிலும்


1

ஏலோ இலோ ஈலோடு வாங்கு
வாங்குடா தோழா
வாழைத்தார் தருவேன்
தேங்காயும் மிளகும் தெரிவிட்ட பாக்கும்
மஞ்சள் இஞ்சி மணமுள்ள செண்பகம்
செண்பக வடிவேல் திருமுடிக் கழகு
வருகுது பெருநாள் தேரோட்டம் பார்க்க
தேரான தேரு செல்லப் பெண்டாட்டி
மாலை மசக்கி மையிடுங் கண்ணாள்
கண்ணுக்குச் செத்த மையிட வேணும்
பொய்யும் பிறக்குமோ பொய்க் கொடியாளே
நானிட்ட வாளை நல்ல சமத்தன்
கோழைப் பயலே கோமுட்டி வயிறா
உனக்கா எனக்கா பல்லாக்கு தனக்கா
வில்லே சரணம் வேந்தன் பாராய்


குறிப்பு: செண்பக வடிவேல்-வேலனைக் குறிக்கும்.
வில்லே சரணம், வேந்தன் பாராய்-இது இந்திரனையும்,
அவனது வில்லையும் குறிக்கும். இப்பாடல் பரதவர் கிறிஸ்தவ
சமயத்தைத் தழுவுமுன் பாடப்பட்டிருத்தல் வேண்டும். இப்பொழுதும்
பாடப்படுகிறது.


2



நாலு தண்டாம் பலவனாக்கு
நடுவ ஒரு பாய் மரமாம்
பாயிழுத்துக் கோசு ஊணி
பருமலுடன் சலுத்தணைந்து
சல் சல்லடம் சடுக்காப்பையா
நீயும் போடா கொய்யாக் கள்ளா
கொய்யாப் பழத்தின் ருசியும்
கொண்டு வந்தாலே தெரியும்
பாரக் கலவா பாப்பர மூஞ்சான்
சேரப்படுக்கும் செல்ல விலை மீன்
பாரக் குழலோ மேக வெளியாய்
ரஞ்சித நடையாள் கெஞ்சுது பாராய்
பண்ணி கிடந்து உறுமுது பாரு
பண்ணியடா ஒரு காட்டுப் பண்ணி
இன்னொரு பண்ணி வீட்டுப்பண்ணி