பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 தமிழர் நாட்டுப் பாடல்கள் இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்த்து உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள். பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள். பிள்ளையார் பிறந்தார் வடக்கே தெற்கே ஒட்டி, வலது புறம் மூரி வச்சு மூரி ஒழவிலே முச்சாணி புழுதி பண்ணி சப்பாணி பிள்ளையார்க்கு என்ன என்ன ஒப்பதமாம்! முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு, ஒடு முத்தும் தேங்காயை ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு, குலை நிறைஞ்ச வாழைப்பழம் கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு, இத்தனையும் ஒப்பதமாம் எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு: வட்டார வழக்கு: முச்சாணி புழுதி - சாணம் புழுதி, ஒடு முத்தும் ஒடு முற்றிய கொடுக்கறமாம். கொடுக்கிறோம். குறிப்பு:- பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமார னென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். இது நாட்டார் நம்பிக்கை. முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள். சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.