பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 41 பிள்ளையார் பூசை உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும், பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலத்தில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும் போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார். காளையே ஏறு... முந்தி முந்தி விநாயகனே! முக்கண்ணனார் தம் மகனே! கந்தருக்கு முன் பிறந்த காளைக் கணபதியே!-(காளையே) வேலருக்கு முன் பிறந்த விக்கினரே முன் நடவாய், ஊருக்கு மேற்காண்டே ஒசந்த தொரு வெப்பாலை. வெப்பாலை மரத்தடியில் சப்பாணி பிள்ளையாராம். சப்பாணிப் பிள்ளையார்க்கு, என்ன என்ன ஒப்பதமாம்! நீரு முத்தும் தேங்காயாம், நிமித்தியமாம் பிள்ளையார்க்கு, கொத்தோடு தேங்காயாம் குலைநிறைய வாழைப்பழம் இத்தனையும் ஒப்பதமாம்-எங்க சப்பாணி பிள்ளையார்க்கு- (காளையே) வண்டு மொகராத-ஒரு வண்ண லட்சம் பூவெடுத்து தும்பி மொகிராத தொட்டு லட்சம் பூவெடுத்து