பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

462 தமிழர் நாட்டுப் பாடல்கள்

     கலகத்தில் இறந்தவன் 
   சாதிக் கலகங்கள் சிறு காரணங்களால் கூடத் தோன்றிவிடும். இத்தகைய கலகமொன்றைப் பற்றி முன்னர் கூறியுள்ளோம். கலகம் ஒன்றில் அவளுடைய கணவன் திடீர் மரணமடைந்தான். போலீசு காவலில் அவனுடைய பிணம் கிடந்தது. அழுது பிதற்றிக் கொண்டு பிணத்தைக் காண வந்த மனைவியின் ஒப்பாரி இது. இதுவும் அபூர்வமானது. 

கூட்டம் நடந்த தென்ன

கொலைக் கேசு ஆனதென்ன

கூட்டத்த விலக்கி விடு

கோட்டாரே என் தகப்பா

கோடி முகத்தை நான்பார்க்க

சண்டை நடந்த தென்ன?

தனிக்கூட்டம் ஆனதென்ன?

சண்டைய விலக்கி விடு

தாசில்தார் என் தகப்பா

ஜனத்தை விலக்கி விடு

தனிமுகத்தை நான் பார்க்க

கலகம் நடந்ததென்ன

கைகலப்பு ஆனதென்ன

கலகத்தை விலக்கிவிடு

கலைக்டரே என் தகப்பா

கட்டி முகம் நான்பார்க்க

மலையிலே வாளிருக்க-நான்

மலையிண்ணு எண்ணியிருந்தேன்

மலையில் வாள் சாஞ்சவுடன்

மலைவு மெத்த தோணுதய்யா.


வட்டார வழக்கு: மலையில் வாள்-கணவன். அவன் இறந்ததும் வலிமை குன்றியதாகத் தோன்றுகிறது.

சேகரித்தவர்: S.M. கார்க்கி


இடம்: சிவகிரி, நெல்லை.