ஒப்பாரி 471
பாக்கும் தழையிலையே
பாதி நாள் வாழலையே
நெய்யூத்திப் பாத்தி கட்டி
நெல்லி மரம் உண்டாக்கி
நெல்லியும் தழையலியே-நான்
நிண்ணொரு நாள் வாழலியே
ஒப்புத் தெரியலிண்ணு
கொப்பு நிறுத்தி வச்சேன்
கொப்பைத் திருப்ப எனக்கு ஒரு
கோடை மழை பெய்யலியே
சீரகம் பூப்பூக்கும்
செடி முறிக்கி பிஞ்செறங்கும்
சீராளன் இல்லாம-நான்
செடியோட வாடுதனே!
கொத்தமல்லி பூ பூக்கும்
கொடி முறுக்கிப் பிஞ்செறங்கும்
கூர் வாளன் இல்லாமே-நான்
கொடியோடு வாடுதனே!
லோட்டா வெளக்கி வச்சு
ரோசாப்பூ உள்ளடச்சேன்
ரோசாப்பூ கவுந்ததென்ன?-நான்
ரோசாப்பூ வாடுதனே
செம்பு விளக்கி வச்சு
செம்பகப்பூ உள்ளடச்சு
செம்பு கவுந்ததென்ன?-நான்
செம்பகப்பூ வாடுதனே!
கொழுந்தி வருவதில்லை
வெள்ளிரியும் பாவையும்
விதைச்சேன் ஒரு பாத்தி
வீமனோட தங்கையல்லோ
வெறுத்தாள் பிறந்தெடத்த
உளுத்தம் பயிரறியேன்
உச்சிப் பயிர் நானறியேன்
ஊரார் சொல் வார்த்தைக்கு
உயிர் வச்சு நானறியேன்
பச்சைக் குருத்தோலை
பகவான் அழைச்சானோ?