பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒப்பாரி 471

பாக்கும் தழையிலையே

பாதி நாள் வாழலையே

நெய்யூத்திப் பாத்தி கட்டி

நெல்லி மரம் உண்டாக்கி

நெல்லியும் தழையலியே-நான்

நிண்ணொரு நாள் வாழலியே

ஒப்புத் தெரியலிண்ணு

கொப்பு நிறுத்தி வச்சேன்

கொப்பைத் திருப்ப எனக்கு ஒரு

கோடை மழை பெய்யலியே

சீரகம் பூப்பூக்கும்

செடி முறிக்கி பிஞ்செறங்கும்

சீராளன் இல்லாம-நான்

செடியோட வாடுதனே!

கொத்தமல்லி பூ பூக்கும்

கொடி முறுக்கிப் பிஞ்செறங்கும்

கூர் வாளன் இல்லாமே-நான்

கொடியோடு வாடுதனே!

லோட்டா வெளக்கி வச்சு

ரோசாப்பூ உள்ளடச்சேன்

ரோசாப்பூ கவுந்ததென்ன?-நான்

ரோசாப்பூ வாடுதனே

செம்பு விளக்கி வச்சு

செம்பகப்பூ உள்ளடச்சு

செம்பு கவுந்ததென்ன?-நான்

செம்பகப்பூ வாடுதனே!

    கொழுந்தி வருவதில்லை 

வெள்ளிரியும் பாவையும்

விதைச்சேன் ஒரு பாத்தி

வீமனோட தங்கையல்லோ

வெறுத்தாள் பிறந்தெடத்த

உளுத்தம் பயிரறியேன்

உச்சிப் பயிர் நானறியேன்

ஊரார் சொல் வார்த்தைக்கு

உயிர் வச்சு நானறியேன்

பச்சைக் குருத்தோலை

பகவான் அழைச்சானோ?