பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 4.73 ஏக்கம் சித்திரக்காலி செவந்த-நான் செவந்த மணவாரி உப்பூத்தி நெல்லிலே-என்ன ஊட கலந்தியளே! நந்தவனம் பூஞ்சோலை நடுக்கிணறு சாவடியாம் தங்கப் புண்ணியர்- இல்லாமே-அய்யா புதுக்கிணறு பாழாச்சே செப்போடு போட்டு சிங்கம் போல் தூணிறுத்தி எப்போதும் போல-மன்னா-உம்மை உடனிருக்கத் தேடுதனே பத்து வகைப் பச்சிலையாம் பார்வதியாள் மாத்திரையாம் பார்வதியாள் உரைக்குங்குள்ளே-உம்ம பகவான் அழைச்சானோ? - பெருமை தூணுல சாஞ்சு-நீங்க துரைகளோட வாதாடி தூணும் துணுக்கிட-உங்க துரை அடிமை வாக்குரைப்பான் கல்லில சாஞ்சு - நீங்க கணக்கனுட வாக்குரைக்க கல்லும் துணிக்கிட்டா-அந்தக் கணக்கனுமே வாக்குரைப்பான் விரலும் கணக்கெழுதும்-உங்க வெள்ளை மொழி தூதாகும்-உங்க கையும் கணக்கெழுதும்-உங்க கருத்த மொழி தூதாகும் சட்டிமேல் சட்டி வச்சு-நான் சரியாய் பிழைச்சு வந்தேன் சட்டி கவுந்ததென்ன?-எனக்கு சனியன் தொயந்த தென்ன? மடிகட்டிக் கல் எறக்கி மண்டபங்கள் உண்டு பண்ணி, கோபுரத்தின் கீழே நான்