பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒப்பாரி 491

எதிரே வரக் காண்ப தெப்போ காந்த லைட்டுக்கு கண்ணுச் சிமிட்டிக்கு பம்பாய் ரோட்டுக்கு பங்களா வீட்டுக்கு வயிர மணித் தாலி வந்து வாய்த்ததின்னு நானிருந்தேன் ஆகாத மாதிருடன் அது தடுக்க முடியாதே வயிர மணித் தாலியை வாரி விட்டேன் விதியிலே

வட்டார வழக்கு: மாதிருடன்-எமதூதன்.

உதவியவர்: இடம்: முத்துசாமி சேலம் மாவட்டம்.

சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி

       சமூகக் கொடுமை
கணவன் வாழ்ந்திருந்த பொழுது மனைவி அருகிலிருந்த நகரத்திற்குச் சென்று சேவல், பால் முதலியன விற்று வருவாள். இப்பொழுது அவள் அமங்கலியாகிவிட்டாள். அவள் தெருவழியே சென்றால் சகுனத்தடை என்று எல்லோரும் கதவடைத்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் வரங்கொடுக்கும் தெய்வத்தின் கோயிலுக்கு அவள் சென்றால் கோயில் பூசாரிகள் கோயிலடைத்துத் தாழ்ப்பாள் போடுவார்கள். விதவைக்கு சொல்ல முடியாத கொடுமைகளை சமூக வழக்கங்களினால் மக்கள் இழைக்கிறார்கள். கணவன் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைவிட, வரப்போகும் துயர வாழ்க்கையை எண்ணி அவள் கண்ணிர் பெருக்குகிறாள்.

கும்பத்துப் பால் கொண்டு கூவாத சாவல் கொண்டு கோய நதி போனாலும் கோய நதி பாப்பாரு கொடுமை பெருத்த கொடுமையா வாரா கோயிலைச் சாத்தி கொக்கி ரெண்டும் போடுமென்பார்