பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

    தமிழர் நாட்டுப் பாடல்கள்


   மேலோ வலிக்குதிண்ணு 
   மெத்தையிலே போய்ப்படுத்தார் 
   தலையோ வலிக்குதிண்ணு 
   தாவாரம் பள்ளிகொண்டார் 
   மண்டை யடிக்குதிண்ணு 
   மக்களெல்லாம் சூழ்ந்திருந்தார் 
   வரிசை மகன் பார்த்திருந்து 
   வைத்தியர்க்கு ஆளும் விட்டார் 
   ஏறினார் காரிலேயே 
   இறங்கினார் மதுரையிலே.
   மதுரைக்கடை வீதியிலே 
   மன்னர் மகன் பண்டுதராம் 
   ஆனைக்கல்லு வீதியிலே 
   அதிகாரி பண்டுதராம் 
   ஓடி வரும் மோட்டாரிலே 
   உட்கார்ந்தான் வைத்தியரும் 
   அஞ்சி மணிக் காரேறி 
   அவசரமாய் வாராராம் 
   மருந்துப் பையை கையிலெடுத்து 
   மன்னர் மகன் வந்து சேர்ந்தான் 
   வாருமையா வைத்தியரே 
   வலது கையைப் பாருமையா 
   இருமையா வைத்தியரே 
   இடது கையைப் பாருமையா 
   கையைப் பிடித்தாரோ 
   கைத்தாது பார்த்தாரே 
   மறு வார்த்தை சொல்லாமலே 
   மவுனமாக இருந்தாரே 
   வரிசை மகன் எந்திரிச்சார் 
   வைத்தியர் முகம் பார்த்தார் 
   என்னையா வைத்தியரே 
   ஏதுமே பேசவில்லை 
   என்ன சொல்வார் வைத்தியரும் 
   இஞ்சி தட்டி வாருமென்றார் 
   பத்து வகை மாத்திரையைப் 
   பார்த்துரைத்தார் பண்டுதரும்