இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
525
ஒப்பாரி
தாழம்பூக் கெண்டியிலே தண்ணிரோ கொண்டு வந்தார் தண்ணீர் இறங்கவில்லை தாமரைப் பூ மேனியிலே மாதாளம்பூக் கெண்டியிலே மருந்து வகை கொண்டுவந்தார் மருந்தோ இறங்க வில்லை மல்லிகைப் பூ மேனியிலே பஞ்சு கொண்டு பாலொழுக்கி பட்டு கொண்டு வாய் துடைத்து என்ன வேணுமின்னு சொல்லி ஈஸ்வரனார் கேட்டாராம் பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம் பூலோகம் வேணுமின்னர் காசு வேண்டாம், பணமும் வேண்டாம் கயிலாசம் வேணுமின்னார் அப்போ மகானிவர்க்கு ஆயுள் முடிந்ததுவே
செப்பியதோர் காலதூதர் சீக்கிரமாய்த் தான் வளைஞ்சார் காலன் கொண்டு போறானே கைலாசம் தீர்த்தமாட எமன் கொண்டு போறானே எமலோகம் தீர்த்தமாட முத்துப் போல் கண்ணிரை-மக்கள் முகமெல்லாம் சோர விட்டார் பவளம் போல் கண்ணிரை-மக்கள் பக்கமெல்லாம் சோர விட்டார் குளிப்பாட்டி கோடி கட்டி, கொண்டு வைத்தார் குறிச்சியிலே முன்னுறு மூங்கியிலே முதல் மூங்கி கொண்டு வந்தார் நானூறு மூங்கியிலே நல்மூங்கி கொண்டுவந்தார்.
மூங்கில் பாய் தானெடுத்து முத்தமெல்லாம் பந்தலிட்டார்
A 519-34