பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

    தமிழர் நாட்டுப் பாடல்கள்

   தென்னம்பாய் தானெடுத்து 
   தெருவெல்லாம் பந்தலிட்டார் 
   சேப்பில் பணம்எடுத்தார்; 
   சென்னபட்டணம் கொட்டழைச்சார் 
   கையில் பணம் எடுத்தார்; 
   பவனி வாத்தியம் வரவழைச்சார் 
   அடிபடுதே மேளவகை 
   ஆசார வாசலுலே 
   முழங்குதையா மேளவகை 
   மூவுலகம் தத்தளிக்க 
   வெள்ளித் தேர் செய்தோமானால் 
   வேலையோடிப் போச்சுதிண்ணார் 
   பொன்னுத் தேர் செய்தோமானால் 
   பொழுதோடிப் போச்சிதிண்ணார் 
   மதுரைக்கு ஆளனுப்பி 
   மச்ச ரதம் கொண்டு வந்தார் 
   செஞ்சிக்கு ஆளனுப்பிச் 
   சேர்த்த ரதம் கொண்டு வந்தார் 
   காசியிலே பட்டெடுத்தால் 
   கனமோ குறையுமிண்ணார் 
   மதுரையிலே பட்டெடுத்தால் 
   மடிப்போ குறையுமிண்ணார் 
   விருதுநகர் பட்டெடுத்தால் 
   விரிப்போ குறையுமிண்ணார் 
   சாத்துருப் பட்டெடுத்தால் 
   சபையோ நிறையாதிண்ணார் 
   பெரு நாளிப் பட்டெடுக்கப் 
   புறப்பட்டார் பிறந்தவரும் 
   நாலுகடை பார்த்து 
   நயமான மல்லெடுத்து 
   கொண்டுமே வாராராம் 
   கூடப் பிறந்தவரும் 
   வரிசை மகள் சேலை
   கொண்டு வாராராம் வீதியிலே 
   செல்வ மகள் சேலைகொண்டு 
   தெருவீதி வாராளாம்
   கொட்டு முழக்கமுடன் 
   கொண்டு வந்தாள் பந்தலுக்கு