பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 527

          ஒப்பாரி 


   நாலு பேர் செம்பெடுத்தால் 
   நடுங்கும் கைலாசம் 
   மூணுபேர் செம்பெடுத்தால் 
   முழங்கும் கைலாசம் 
   ஆழமுள்ள கங்கையிலே 
   அலரத் தலைமுழுகி 
   நீள முள்ள கங்கையிலே 
   நின்னு தலைமுழுகி 
   ஏழாறு தான் கடந்து 
   எடுத்து வந்தார் நல்ல தண்ணீர் 
   அஞ்சாறு தான் கடந்து 
   அள்ளி வந்தார் நல்ல தண்ணிர் 
   மூணாறுதான் கடந்து 
   மோந்து வந்தார் நல்ல தண்ணீர் 
   செங்கை மடைதிறந்து 
   செம்பு கொண்டு நீர் மோர்ந்து 
   மாராடி நூல்போட்டு 
   மாவிலையும் கையிலெடுத்து 
   கெண்டி மேல் தேங்காய் வச்சி 
   செவ்வரளி மாலைபோட்டு 
   ஒரு மகனும் செம்பெடுத்தால் 
   ஓடி வரும் நீர்மாலை 
   குளுப்பாட்டி கோடிகட்டி 
   கொண்டு வந்தார் பந்தலுக்கு 
   மாலை கையிலெடுத்தார்; 
   மரக்கால் தலையில் வைத்தார் 
   காசி காசியிண்ணு சொல்லி 
   கட்டி மகன் நீர் தெளிச்சார் 
   சுத்தி வந்து நீர் தெளிச்சு 
   சூரியரைக் கையெடுத்தார் 
   பக்கம் வந்து நீர் தெளிச்சு 
   பகவானைக் கையெடுத்தார் 
   சீதேவி தான் வாங்கி
   ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார் 
   வெள்ளி படி கடந்து 
   வெளியேறச் சம்மதமோ 
   பொன்னும் படி கடந்து 
   போகவும் சம்மதமோ