இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
527
ஒப்பாரி
நாலு பேர் செம்பெடுத்தால் நடுங்கும் கைலாசம் மூணுபேர் செம்பெடுத்தால் முழங்கும் கைலாசம் ஆழமுள்ள கங்கையிலே அலரத் தலைமுழுகி நீள முள்ள கங்கையிலே நின்னு தலைமுழுகி ஏழாறு தான் கடந்து எடுத்து வந்தார் நல்ல தண்ணீர் அஞ்சாறு தான் கடந்து அள்ளி வந்தார் நல்ல தண்ணிர் மூணாறுதான் கடந்து மோந்து வந்தார் நல்ல தண்ணீர் செங்கை மடைதிறந்து செம்பு கொண்டு நீர் மோர்ந்து மாராடி நூல்போட்டு மாவிலையும் கையிலெடுத்து கெண்டி மேல் தேங்காய் வச்சி செவ்வரளி மாலைபோட்டு ஒரு மகனும் செம்பெடுத்தால் ஓடி வரும் நீர்மாலை குளுப்பாட்டி கோடிகட்டி கொண்டு வந்தார் பந்தலுக்கு மாலை கையிலெடுத்தார்; மரக்கால் தலையில் வைத்தார் காசி காசியிண்ணு சொல்லி கட்டி மகன் நீர் தெளிச்சார் சுத்தி வந்து நீர் தெளிச்சு சூரியரைக் கையெடுத்தார் பக்கம் வந்து நீர் தெளிச்சு பகவானைக் கையெடுத்தார் சீதேவி தான் வாங்கி ஸ்ரீராமர் வீடுசேர்ந்தார் வெள்ளி படி கடந்து வெளியேறச் சம்மதமோ பொன்னும் படி கடந்து போகவும் சம்மதமோ