இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
529
ஒப்பாரி
போகுதையா பூந்தேரு பூலோகம் தெத்தளிக்க இண்டு மணக்குதையா இடுகாடு பூமணக்கும் வாயை மணக்குமையா வைகுண்டம் பூமணக்கும் இடு காடு தேரிறக்கி எமலோகம் போறேனிண்ணார் சுடுகாடு தேரிறக்கி சொர்க்க லோகம் போறேனிண்ணார் தேரை விட்டுக் கீழிறக்கி செல்ல மக்கள் வந்து கூடி பொன்னரசி கையிலெடுத்து போட்டார்கள் வாய்க்கரிசி சந்தனக் கட்டை வெட்டி சதுருடனே தீ மூட்டி கொள்ளி வச்சி குடமுடைச்சி கோலவர்ணத் தேரவுத்து செலவு தொகை தான் கொடுத்து செல்ல மகன் தலைமுழுகி சிவ சிவா என்று சொல்லி திருநீறும் தானணிந்தார்.
குறிப்பு: இதில் சாவுச் சடங்குகள் வரிசையாக சொல்லப்படுகின்றன.
சேகரித்தவர். இடம்: S.S. போத்தையா விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
மாரடிப் பாட்டு-3
கவர்னர் தலைவாசலுல கருத்த யானை கெட்டியிருக்க கருத்த யானை கொம்பு தச்சி-இந்த கவர்னர் துரை மாண்டதென்ன வீமர் தலைவாசலுல வெள்ளானை கெட்டியிருக்க வெள்ளானை கொம்பு தச்சி வீமர் துரை மாண்டதென்ன