பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

தமிழா் நாட்டுப் பாடல்கள்




பராமலை சாய்ந்தது

கணவனும் மனைவியும் குறைவற வாழ்ந்து வரும் பொழுது, மனைவி சில தீய நிமித்தங்களைக் கண்டாள். மலை சாய்ந்து விட்டது; தோப்பிலிருந்த மணி உடைந்தது; கடுகுப் பயிரும், மிளகுப் பயிரும் பயன் தரவில்லை; இவற்றைக் கண்டு, காலனைப் போல சொல் தவறாத ஜோசியர்களிடம் சென்று வருங்காலத்தைப் பற்றிக் கேட்கச் சென்றார்கள். அவர்கள் எழுத்திங்க', 'பொழுது இல்லை' என்று சொல்லி விட்டார்கள். இதனால் காலம் கெட்ட காலம் சீக்கிரம் மாறும் என்றே எண்ணி வந்தார்கள். ஆனால் அவன் இறந்து விடுவான் என்று மனைவி நினைக்கவேயில்லை.

கட்டிலுக்குக் கீழே
காத்திருந்தோம் சிலகாலம்
காத்திருந்தோம் கண்ணப்பொத்தி
காலன் வந்த மாயமென்ன?
மெத்தைக்குக் கீழே
வித்திருந்தோம் சிலகாலம்
வித்திருந்தோம் கண்ணப்பொத்தி
வீமன் போன மாயமென்ன?
பத்துமலைக் கப்பாலே,
பார மலைக்கிப்பாலே
பாரமலை சாஞ்சொடனே
பகவானை கைதொழுதோம்
எட்டு மலைக்கப்பாலே
இலங்கை மணிதோப்போரம்
இலங்கை மணி உடச்சொடனே
இந்திரரைக் கையெடுத்தோம்
கடுகு பயிர் ஆகுமிண்ணு
காத்திருந்தோம் சிலகாலம்
கடுகு பயிர் ஆகவில்லை
காத்திருந்தோம் வீணால
முளகு பயிர் ஆகுமின்னு
முழிச்சிருந்தோம் சிலகாலம்
முளகு பயிர் ஆகவில்லை
முழிச்சிருந்தோம் வீணால
கடுவரைச்சுக் கோலமிட்டு
காலனவே வரவழைச்சி