பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

553




காஞ்சியிலே எங்கப்பன் வீடு
கடலைக்காய் மெத்தை விடு
காசி ராஜன் பெத்த பொண்ணு
கடையோரம் நிண்ணழுதால்
கடைக்குச் சொந்தக்காரி-என்னை
காதம் போய் நில்லச் சொன்னாள்
தூரத்திலே எங்கப்பன் வீடு
துவரைக்காய் மெத்தை வீடு
துளசி ராஜன் பெத்த பொண்ணு
தூணாேரம் நிண்ணழுதால்
தூணுக்குச் சொந்தக்காரி-என்னை
தூரம் போய் நில்லச் சொன்னாள்

வட்டார வழக்கு: நில்ல-நிற்க.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

மடி ஏந்தி பொய்யானேன்

கல்யாண மேடையிலே கணவரின் கையைப் பிடித்ததும், அப்பொழுது நடைபெற்ற விசேஷ சம்பவங்களும் இப்பொழுது நடைபெற்றது போல் தோன்றுகிறது. ஆனால் குறுகிய காலத்தில் அவள் கணவன் அற்பாயுளில் இறந்து போனான். தன்னுடைய கல்யாணத்தையே கனவு என்று எண்ணும்படி இறந்து போன தன் கணவனுடன் தான் மகிழ்ச்சியுடன் நெடுங்காலம் வாழாமல் தன் கனவுகளைப் பொய்யாக்கி விட்டு மறைந்த தன் கணவனை எண்ணிக் கதறுகிறாள்.

மண்ணைத் திரி திரிச்சி
மறு மண்ணை வில் வளச்சி
மாளிகை மேடையிலே-நான்
மடி ஏந்தி பொய்யானேன்
கல்லைத் திரி திரிச்சி
கருமணலை வில் வளச்சி
கல்யாண மேடையிலே-நான்
கை ஏந்தி பொய்யானேன்
கத்தரிக்காய் பூ பூக்கும்
கடலோரம் பிஞ்செறங்கும்