பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558

தமிழா் நாட்டுப் பாடல்கள்


 நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிக் குறைப்பட்டு அழும் மனைவியின் ஒப்பாரி.

ஊமத்தம் பூ வெல்லாம்
உள்ளிருந்து பேசுது
ஒரு சேர் மல்லியப்பூ-நான்
 உள்ள வர அஞ்சரனே
நார்த்தம் பூ வெல்லாம்
நடுவிலிருந்து பேசுது-நான்
நாலு சேர் மல்லியப்பூ
நடுவில் வர அஞ்சரனே

வட்டார வழக்கு: அஞ்சரனே-அஞ்சுகிறேனே.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

நியாயம் கிடைக்கவில்லை

குழந்தையிலிருந்து விதவையானால் அவளுக்குப் புகுந்த வீட்டில் ஒரளவு அதிகாரமும், சுதந்திரமும் உண்டு. சொத்துரிமையும் கிடைக்கும். குழந்தையில்லாத மலடி என்னும் பட்டம் பெற்றவள் அவள். அத்துடன் கணவனும் இறந்து போனான். பிறந்த வீட்டுக்குச் செல்லலாமென்றால் அங்கும் இருக்க வழியில்லை. புகுந்த வீட்டுச் சொத்தில் தன் கணவனுக்கு உரிய பாகத்தைச் சாதாரணமாக வாயாலே கேட்கிறாள் கிடைக்கவில்லை. ஊர்ப் பொதுவில் நாட்டாண்மைக்காரர்கள் முன்னிலையில் தான் நியாயம் கேட்டாலும் தனக்கு நியாயம் கிடைப்பதாகத் தெரியவில்லையெனவும், காலம் வீணாகக் கழிகிறதே எனவும் கூறி வேதனைப்பட்டு அழுகிறாள்.

புளியாம் மரத்தின் கீழே
பொன் குறிஞ்சி போட்டிருக்கும்
பொன் குறிஞ்சி மேலிருந்து
பொண்ணு நியாயம் பேசினாலே
பொழுது வெளியாச்சு
பொண்ணு நியாயம் தீரவில்லை
மாமரத்தின் கீழே
மண் குறிஞ்சி போட்டிருக்கும்