58
தமிழர் நாட்டுப் பாடல்கள்
எழுத்தாணி மூக்கழகும் கையிலே வீச்சறுவா; காலுலே வீரத் தண்டை நெத்தியில் பொட்டுமிட்டு, நீல வர்ணப் பட்டுடுத்தி பட்டு பளபளென பாடகக்கால் சேராட; தோள் மேலே பச்சைக் கிளி தோழனழைத் தேனிப்பம் கரு நாயும் சங்கிலியும்;
கைப்பிடித்து வாருமிப்போ, வெள்ளக் குதிரை ஏறி வெடி வாலும் சீனிமட்டம் நெத்தியிலே சுட்டு கட்டி; நீல வர்ணப் பூச்சூடி மத்தியான வேளையிலே மாதர்களைத் தானடக்கும் பக்தியுள்ள ஏ. கறுப்பா பதினெட்டாம் படியோனே. ஏமமும், சாமமும் எந் நேர வேளையிலும் அந்தி சந்தி வேளை யெல்லாம் ஐயா துணையிருந்து கேட்ட வரம் நீ கொடுக்கும் கிருவையுள்ள ஏ. கறுப்பா! வாலைக் கறுப்பா வாருமையா இது வேளை. முன்னோடி ஏ கறுப்பா முன்னிலையில் வாருமிப்போ ஏழை அழைத்தேனையா இது சமயம் வாருமிப்போ பாலன் அழைத் தேனையா பாரும் குழந்தை முகம் அஞ்சிலே ரெண்டறியேன் அடியேன் சிறுகுழந்தை பத்திலே ரெண்டறியேன் பாலன் சிறு குழந்தை