பக்கம்:தமிழர் மதம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடை நிலை யியல் ககக அவ்வவ் வரணத்திற் குரிய குணங்கட் கேற்பக் கடமைகள் வகுக் கப் பட்டுள்ளன வென்று, கூறப்பட்டுள்ளது. இதுவே அந் நூலா சிரியன் கூறக் கருதிய உயிர் நாடிச் செய்தி. முதற் பதினேழ் அதிகாரங்களிற் பல்வேறு அறவினைகளையும் பத்தி யொழுக்கத் தையும் எடுத்துக் கூறி, கடவுள் நம்பிக்கை யுள்ளவரும் பகுத் தறிவைப் பயன்படுத்தாதவருமான மக்களைப் படிப்படியாக வயப்படுத்தி, இறுதிப் பதினெட்டாம் அதிகாரம் 4-ஆம் சொல வத்தில், பாலொடு தேன் கலந்த படுநஞ்சை யூட்டுவது போல் இப் புரட்டுச் செய்தியைப் புகட்டி யிருக்கின்றான். நால் வரணப் பகுப்பு இறைவன் ஏற்பாடாயின், இந்தியா விற் போன்றே ஏனை நாடுகளிலும் அவ் வொழுங் கிருத்தல் வேண்டும். அஃதில்லை. மேலும், பிராமணர் நால் வரணத்தார் தொழிலையுந் தொன்று தொட்டுச் செய்து வந்திருக்கின்றனர். அருச்சுனன் தன் குரவரையும் நெருங்கிய உறவினரையும் போர்க்களத்திற் கண்டு, அவரைக் கொல்லத் துணிவு கொள் ளாது பின் வாங்கிய போது, அவன் தன் கடமையைச் செய்யு மாறு அவனைத் தேற்றியதே கண்ணன் செய்த தெல்லாம். பக வற் கீதை போன்ற நூற் செய்தியைப் போர்க்களத்திற் சொல்ல நேரமும் இருந்திருக்காது. சொல்லி யிருப்பின், பகை மறவர் அதற்குள் தாக்கி வென்று மிருப்பர். பகவற் கீதையைக் கண்ணனார் சொல்லி யிருப்பின், அவ ரேனும் அதைச் செவியுற்ற அருச்சுன னேனும் அவ் விருவருள் ஒருவர் சொல்லக் கேட்ட வேறொருவ ரேனும், அக் கீதையை எழுதி யிருத்தல் வேண்டும். அங்ஙனம் ஒருவரும் எழுதியிலர் , அக் கீதைக்கு ஆசிரியன் பெயரும் குறிக்கப் படவில்லை. திரு த ராட்டிரன் சஞ்சய முனிவனிடம் போர் நடபடிக்கைகளைப் பற்றி வினவிய தாகவும், அம் முனிவன் தான் வியாசனிடம் கேட் டதை அவனுக்குச் சொன்னதாகவுமே, கீதைச் செய்தி அமைந் துள்ளது. போர்க்களத்தில் இரு படைக்ளும் போர்த் தொடக்கக் குறியாகப் போரிசைக் கருவிகளை முழக்கிய பின், ஒரு மாநாட் டுச் சொற்பொழிவினும் மிக விரிவான உரையாட்டும் செவியறி வுறவும் நிகழ்ந்தன வென்பது, நம்பத் தக்க செய்தி யன்று, மேலும், கண்ணன் இறைவனின் தோற்றர வென்று கொள் ளப் படுவதால், நால் வரணமும் இறைவனாற் பிறவிக் குலமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/127&oldid=1429707" இலிருந்து மீள்விக்கப்பட்டது