பக்கம்:தமிழர் மதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

V முடிபுரை யியல் க. எது தேவ மொழி? சமற்கிருத வரலாறு தெற்கே முழுகிப் போன குமரி நாட்டில், தோரா. கி. மு. ஐ0,000 ஆண்டுகட்கு முன், தமிழ் என்னும் உலக முதன் மொழி தோன்றிற்று. அது வடக்கு நோக்கிப் பரவித் திரவிடமாகத் திரிந்தது. திரவிடம் வடமேற்கு நோக்கிப் பரவி, ஐரோப்பா வில் ஆரியமாக மாறியது. ஆரியம் ஐரோப்பாவின் வடமேற்கி னின்று தென் கிழக்கு நோக்கி வந்து இந்தியாவிற்குட் புகுந்து, வழக்கற்று வட திரவிடமாகிய பிராகிருதத்தொடு கலந்து வேத மொழியாயிற்று. அதனாலேயே, மேலை யாரியத்தில் உள்ள எகர ஒகரங்களை இழந்தும், அதிலில்லாத டகர ணகரங்களைப் பெற்றும், உள்ளது. வேதமொழி தமிழோடு கலந்து அரைச் செயற்கை யான சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary dialect) புணர்க்க ப் பட்டது. சமற்கிருதம் ஓரிடத்தும் ஒருகாலும் ஓரினத்தாராலும் தாய் மொழியாகப் பேசப் பட்டதன்று. அது பிறப்பும் இறப்பு மில்லாப் பாவை போன்றது. வேதக் காலத்தில் வட இந்தியாவில் வழங் கிய மொழிகள் 'பிராகிருதம்' எனப்பட்டன. பிராகிருதம் = முந்திச் செய்யப் பட்டது. ஸம்ஸ்க்ருதம் - பிந்திக் கலந்து செய்யப் பட்டது. இவ் விரு பெயரும் உறவியற் சொற்கள் (Relative terres). தமிழையும் 'த்ராவிடீ' என ஒரு பிராகிருத மாக்குவர். வேத மொழி வேறு; சமற்கிருதம் வேறு. மேலையர் சமற் கிருதத்தை அடிப்படையாக வைத்து ஆய்ந்ததனால், தலை கீழான முடிபும் பல தவறான கருத்துங் கொண்டுள்ளனர். இன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/163&oldid=1429633" இலிருந்து மீள்விக்கப்பட்டது