பக்கம்:தமிழர் மதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசஅ தமிழர் மதம் வெறியும் குமரி நாட்டிலக்கிய அழிவும் இற்றைத் தமிழரின் தாழ் நிலையும் மேலையர் கண்ணை மறைக்கின்றன. சமற்கிருத வண்ண மாலை வேத ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்கள், வேதம் ஏற்பட்ட பின்பும், நீண்ட நாள் அவர்கள் எழுத்தில்லா திருந்தனர். அவர்கள் வேதம் வாய் மொழியாகவே வழங்கி வந்ததால், எழுதாக் கிளவி யெனப் பட்டது. சமற்கிருதம் தோன்றிய பின்னரே, தமிழ் நெடுங் கணக்கைப் பின்பற்றிய வண்ணமாலை, முன்பு கிரந்த எழுத்திலும், பின்பு தேவ நாகரியிலும், அமைக்கப் பட்டது. சமற்கிருதச் சொற்கள் (க) சுட்டுச் சொற்கள். திரவிடத்திற் போன்றே ஆரியத்திலும், சுட்டுச் சொற்கள் அ, இ, உ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துக்களையே மூலமாகக் கொண்டன. தமிழ்ச் சுட்டெழுத்துக்கள் சமற்கிருதத்திற்கு முந்தியவை யென்றும், ஆரியத்தின் மூல மொழியொடு தொடர்புடையன வென்றும், கால்டுவெலார் தேற்றமாகக் கூறி யிருத்தலைக் காண்க. சமற்கிருதச் சொற்கள், திரி சொற்களாதலால், ஓரெழுத்துச் சொல்லா யிராது பல வெழுத்துச் சொல்லாகவே யிருக்கும். எ-டு: அதஸ் - அது, அப்படி, அங்கே . இஹ- இங்கே, இவ்விடத்தில், இவ்வுலகில். சில சுட்டுச் சொற்கள் இடமாறிச் சுட்டும். எ--டு: அத்ர- இங்கே , அதுனா = இப்பொழுது. சில சுட்டுச் சொற்கள் சேய்மை யண்மையிரண்டையும் சுட்டும். எ-டு: அத்தஸ் (atas)= அதனால், இதனால், இகரச் சுட்டு ஏகார மாகவும் திரியும். - - எ-டு: ஏதத் (etad) - இது, இங்குள்ளது, இங்கு. ஏவம் - இப்படி..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/164&oldid=1429634" இலிருந்து மீள்விக்கப்பட்டது