பக்கம்:தமிழர் மதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் பேய் என்னும் ஆவியினம் இருப்பது உண்மையே யாயினும், அறியாமையினாலும் ஆய்ந்து பாராமையினாலும், பேயல்லாதவற் றையும் பேயென்று மயங்கி யுணர்வது மாந்தரியல்பாக வுள்ளது. கஅ சதுப்பு நிலங்களில் அழுகற் பொருளினின்று கிளம்பும் ஆவி யம் (gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு Garrafleursù Bud (ignis fatuus, jack-o'-lantern, will-o'-the- wisp, fen-fire) என்பது அறியாமை பற்றியதாகும். இராக் காலத்தில், காற்றினால் அண்மையிலுள்ள மரக்கிளை வளைந்து நவின்மேற் படுவன் பேய் தாகவும், நில வொளியில் அசையும் மரக்கிளையின் நிழல் பலகணி வழியாய் அறைக்குள் விழுவதைப் பேய் குதிப்பதாகவும், கருதுவது ஆய்ந்து பாராமையின் விளைவாகும். பேய் என்னும் சொல், அச்சுறுத்துவது என்றும் அஞ்சுவது என்றும், பொருள்படும். "பேம்தாம் உரும்என வருஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.' பே-பேம். பே-பேய். (தொல்.உரி.கூஎ). "அஞ்சினவன் கண்ணிற்கு ஆகாய மெல்லாம் பேய்.3’, ‘"அஞ்சினவனுக்கு அகப்பைக் கணையும் பேய்""அரண்டவன் கண்ணிற்கு இருண்ட தெல்லாம் பேய்.” என்னும் பழமொழிகள், அச்சத்தினாலேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கும். இனி, உண்மையான சில பேய்களும், அஞ்சுவாரைக் கண்டு அச்சுறுத்துவதும், அஞ்சாதாரைக் கண்டு விலகிப்போவ தும், உண்டு. இதையே, "ஆளைக் கண்டு ஏய்க்குமாம் ஆலங் காட்டுப்பேய்." என்னும் பழமொழி உணர்த்தும். ஒரு சத்திரத்தி லிருந்த அரசகுலப் பெண்பேய், அங்கு வந்து தங்கியவரை யெல்லாம் துன்புறுத்தியது போல், ஔவையாரை யும் நாற் சாமத்திலும் துன்புறுத்த வந்தது. அவர் ஒவ்வொரு சாமத்திலும் ஒவ்வொரு வெண்பா பாட, அது ஓடிப் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/34&oldid=1428886" இலிருந்து மீள்விக்கப்பட்டது