பக்கம்:தமிழர் மதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் களாகிய எழுபது வேளாளரையும், நீலிப்பேய் ஏமாற்றி யிருக்க முடியாது. பேய்கட்கும் பூதங்கட்கும், கள்ளும் இறைச்சியும் படைப் பதும் கடாவும் சேவலும் காவு கொடுப்பதும், கல்வியும் பண் பாடுங் குன்றிய பொதுமக்கட்குக் களிப்பையும் ஊக்கத்தையும் ஊட்டுவனவா யிருந்தன. சில சமையங்களிற் புதைய லெடுக்கவும், கிணறு வெட்ட வும், கட்டிடங் கட்டவும், நரக் கொடுக்க வேண்டிய தாயிற்று. புதையலைப் பூதங் காத்தாற் போல்.3 "கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல்." என்னும் உவமைப் பழமொழிகள் கவனிக்கத் தக்கன. கஎ தீய ஆவிகள் சிறுபிள்ளைகளைத் தீண்டாவாறு, அவர்களின் தலையுச்சியில் அரைத்த வெண்சிறு கடுகை அப்பி வந்தனர். போரிற் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாவாறு, பெண்டிரும் உறவினரும், வேப்பங் குழையை வீட்டிற் செருகியும், மையிட்டும், வெண்சிறு கடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப் பண் பாடியும் காத்தனர் என்பது, "தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி ஆம்ப லூதி இசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே.3 என்னும் புறப்பாட்டால் (உஅக) அறியப்படும். "கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே” என்று, புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தரை வெட்டிப் பாடி வேம்பின் சிறப்பை நாட்டியது இங்குக் கவனிக்கத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/33&oldid=1428885" இலிருந்து மீள்விக்கப்பட்டது