பக்கம்:தமிழர் மதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பகுத்தறி வுண்மை யின்மை பற்றிப் பொருள்களை யெல்லாம்,

"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே.

என இருதிணையாக வகுத்த குமரிநாட்டுத் தமிழர், ஏனைத் துறை களிற் போன்றே மதத் துறையிலும் தலைசிறந் திருந்தனர்.

ஆயினும், பல்சிறு தெய்வக் கொலை வேள்வி வளர்ப்பையே மதமாகக் கடைப் பிடித்துக் கடவு ளியல்பை யறியாத, ஆரியருள் ஒரு சிறு குழுவார் தென்னாடு வந்து, பழங்குடிப் பேதைமை, கொடைமடம், மதப் பித்தம் ஆகிய குற்றங்களைக் கொண்ட முத் தமிழ்வேந்தர் குடி களையும், தாம் நிலத் தேவ ரென்றும் தம் இலக்கிய மொழி தேவமொழி யென்றும் சொல்லி யேமாற்றி வயப் படுத்தி, அவர் வாயிலாகப் பொது மக்களையும் அடிப்படுத்தி, தம் வேதமொழியைத் தமிழால் வளம் படுத்திச் சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைத் தோற்றுவித்து, அதில் மறை நூலும் மந்திர நூலும் உட்படப் பழந் தமிழ் நூல்களை யெல்லாம் மொழிபெயர்த்தபின் மூல நூல்களை யெல்லாம் ஒருங்கே யழித்து விட்டு, தமிழர் மதங்களில் ஆரியத் தெய்வங் களைப் புகுத்தி இந்து மதம் என்னும் கலவை மதத்தை யுண் டாக்கி, தமிழையும் தமிழரையும் மதத் துறையி னின்று விலக்கி, சமற்கிருதத்தையே மதவியல் மொழியாக்கி அதிற் பிராமணரே இறை வழிபாடும் இரு வகைச் சடங்கும் நடத்தி வைக்குமாறு ஏற்பாடு செய்து விட்டனர். அவ் வேற்பாடே இன்றும் நடை பெற்று வருகின்றது.

இற்றைத் தமிழ் நிலைமையையும் தமிழர் நிலைமையையும் மேனோக்காக நோக்குவார்க்கு, தமிழ் மொழி நாகரிகம் மதம் ஆகிய மூன்றும் ஆரிய வழிப் பட்டன வாகவே தோன்றும். ஆயின், நுழைந்து நோக்குவார்க்கு, “ஆரியர் நாகரிகத் துறை யில் திரவிடராக மாறிய போது, திரவிடர் மொழித் துறையில் ஆரியராகத் திரிந்து விட்டனர்” ("While the Aryans were Dravidised in culture, the Dravidians were Aryanized in

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/5&oldid=1448929" இலிருந்து மீள்விக்கப்பட்டது