பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு... வாணிகம் 147 தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்களில், பருத்தி உடைகள் பெரிய இனமாம். பெரிபுளுஸ் அவர்களால் "அர்கரு" (Argarw) என அழைக்கப் படும் உறையூரிலிருந்து, இன்றைய திருச்சிராப்பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட "அர்களிடிக்" (Argaritic) மென்துணி, அவற்றுள் சிறப்பானது (Warmington, Page , 59). தென் னிந்தியாவிலிருந்து பருத்தியும் ஏற்றுமதி செய்யப்ட்டது. "டையோக்லெடியன்" (Diocietion) அவர்களின் ஆணை, திணிக்கப்பட்ட மெத்தை, தலையணைகள், இந்தியப் பருத்தியிலிருந்து செய்யப்பட்டனவாகக் காட்டுகிறது. இந்திய உடைகள் பலவற்றைப் பாலஸ்தீனமும் வரவழைத்தது" (Warmington. Page : 212). இந்தியாவிலிருந்து உரோமர்கள் இறக்குமதி செய்த மரங்களில் சில, அழகு பொருட்களாவன; சில கட்டிடங் களுக்காவன; மற்றவை, நறுமணத்தைலம், மருந்துகள் செய்யப் பயன்படும் மணம்தரு மரங்கள். முன்னதில் சிறப்பானவை, கருங்காலி, செம்மரம், தேக்குகள் (Periplws : Page:36). பின்னவற்றில் சிறந்தன, சந்தனமரம், செஞ்சந்தன மரம், அகில், தெல்லச்சேரி மரப்பட்டை, முதலியன (Warmington, Page: 215.216). தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி க்குப் பெரிபுளுஸ் அவர்களும், வாழை, அரிசி, தினை, சாதிக்காய் போலும் மருந்தாகப் பயன்படும் மரம் தரு பொருள்கள், புள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குப் பிளைனி அவர்களும் சான்று பகர்கின்றனர். வெற்றிலையும் பாக்கும் கூடப் பல்வேறு எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிப்பொருள்களிலான வாணிகம் : முசிறி, நெல்கியந்தா (Nelenda) ஆகிய இடங்களிலிருந்து, உரோமுக்கு அனுப்பப்பட்ட, கணிப்பொருள் வகை உற்பத்திப் பொருட்களில், வைரம்தான், மிக மிக விலை வாய்ந்த பண்டம், பெரிய வைரங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைப், பண்டைத் தமிழர் தடுத்து நிறுத்தினர் என்றாலும், உரோமானியர் இந்திய மாதிரி தாயத்துக்கள் என்ற வடிவில்,