பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 223 காவிரிப்பூம்பட்டினம் செல்லத்துடிக்கும் தன் நெஞ்சை நோக்கிக், "காதலியை விடுத்து, நெஞ்சே! நின்பின் வாரேன்" எனக் கூறியுள்ளார். - "முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன்: வாழிய, நெஞ்சே!" - பட்டினப்பாலை : 218 - 20. (என்ற தொடருக்கு அவர் கூறும் இதுவன்று பொருள், "காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாயினும், என் காதலியைப் பிரிந்து, அப்பட்டினம் போலும் பெருஞ்செல்வம் தேட விரையும் நெஞ்சே! உன்பின் வாரேன்" என ஒரு காதலன் கூறினான் என்பதே இதன் பொருள் : பாடியவர், உருத்திரங்கண்ணனார் ஆயினும், இது அவர் கூற்று அன்று, ஒரு காதலன் கூற்று; அவன் கூற்றைப் புலவர் எடுத்துக் கூறினார் என்பதே பொருள்). கரிகாலன், தன் ஆட்சிக் காலத்தில், தலைநகரை, உறையூரிலிருந்து, வளர்ந்து வரும் இக்கடற்கரை நகருக்கு மாற்றினான். பற்பல நிலைகளைக் கொண்ட மாளிகைகளைக் கொண்ட உறையூரில், திருக்கோயில்களோடு, மக்கள் குடியிருப்புக்களையும் நிறுவினான். பெரிய வாயில்களோடு, சிறுசிறு வாயில்களையும் அமைத்தான். அந்நகரைச் சூழ உள்ள மதில்கள் தோறும், அம்புக்கட்டுகள் போலும் படைக்கலப் பொறிகளையும் நிறுவினான். "பிறங்குநில மாடத்து உறந்தை போக்கிக், கோயிலொடு குடிநீறி.இ. வாயிலொடு புழை அமைத்து ஞாயில்தொறும் புதை நிறீஇ" - பட்டினப்பாலை : 285-288. இப்பாட்டு, இளமைப் பருவம் தொட்டு நடைபெற்ற கரிகாலன் வெற்றிச் செயல்களை விளக்கிக் கூறுகிறது. தந்தை