பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழர் வரலாறு இந்துக்களில் பெரும்பகுதியினர்க்குத் தெரியும்; ஆனால், கி. மு. ஏழாம் நூற்றாண்டில், நிலைமை அவ்வாறு இல்லை, வால்மீகி இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுப்பட்டதான இராமகாதை, நாடோடிப் பாடல்களாக, அன்று வழக்கில் இருந்தது என்பது பெளத்த ஐாதகக் கதைகளில், 461 வது காதையான தசரத ஐாதகக் கதையால் உறுதியாகிறது. அக்கட்டுக் கதை வருமாறு : பனாரஸ் அரசன் தசரதனுக்குப் பதினாறாயிரம் மனைவியர் உள்ளனர்; அவனுடைய மூத்த ராணிக்கு, இராம பண்டிதன், அதாவது அறிவாளி ராமன், லக்கண குமாரன், சீதாதேவி ஆகியோர் பிறந்தனர். இந்த ராணி இறந்ததும், தசரதன், மற் றொருத்தியை மூத்த ராணியாகக் கொண்டான். அவளுக்குப் பரதன் பிறந்தான். இந்த ராணி, தன் மகனுக்கு அரசைக் கொடுக்குமாறு அவனைத் தொல்லைப்படுத்தினாள். தசரதன் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டு, நாட்டில் இருந்தால் அவர்கள் அழிவிற்கு மூத்தராணி சூழ்ச்சி செய்துவிடுவாள் ஆதலின், இராமனையும், லக்கணனையும், சீதாதேவியையும், காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு நிமித்திகன் கூறியவாறு, தான் இறந்துவிடும் பன்னிரண்டாம் ஆண்டு இறுதியில் திரும்பி வந்து அரசுரிமையைக் கேட்குமாறு பணித்தான். அவர்கள் இமயத்திற்குச் சென்று ஒரு பர்ணக சாலையில் வாழ்ந்து வந்தனர். ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு துயரத்தால் அரசன் இறந்துவிட்டான். பரதன், இராமன் தங்கியிருந்த ஆசிரமத்தை நாடி அடைந்து திரும்பிவந்து நாடாளுமாறு இராமனை வேண்டிக்கொண்டான். தந்தை ஆணையிட்ட பன்னிரண்டு ஆண்டுகள் கழிவதற்கு முன்னர் வர முடியாது என மறுத்துவிட்டுப், பரதனிடம் தன்னுடைய பாதுகைகளைக் கொடுத்து, அவை மூன்றாண்டு காலம் நாட்டை ஆளும் எனக் கூறி அனுப்பினான். பின்னர்ப் பரதன், லக்கணன், சீதாதேவி ஆகிய மூவரும் பாதுகைகளோடு தலைநகர் திரும்பினார். மூன்று ஆண்டுகள் கழிந்ததும், இராமன் பனாரஸ்ஸுக்குச் சென்று, சீதா, தன் மனைவியாக,