பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தமிழர் வரலாறு

வேதாந்தம் :

வேதத்தின் - முடிந்த முடிவு வேதாந்தம். வைதீகக் கர்மத்தின் முடிந்த முடிவு ஞானம். இறவாப்பெரு நிலையை அடைவதற்குரிய மார்க்கம் அறிவுடைமை. “அவனை அறிவதன் மூலமே, இந்நில உலகில், ஒருவன் இறவாம். பெரு நிலையை அடைகிறான். அவனை அடைவதற்கு இது தவிர்த்து வேறு வழி இல்லை” (தம் எவம்வித்வான் அமர்த பஹவதி நான்யஹ பந்தா அயனாய வித்யதே” என்கிறது ஸ்ருதி) ஆகம நெறியின் முடிந்த முடிவே பக்தி. இறவாப் பெரு நிலையை அடைவதற்கான வழி, அவன் மீது இடை விடாத் தியானம் ஒன்றே ஆம். (அனன்ய சிந்தா). அல்லது. ஸ்ரீ கிருஷ்ணன் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கூறுமாறு, ஒருவனைப் பற்றியே சிந்தித்தல், (ஏக பக்தி). உபநிஷதத்தில் கற்பிக்கப்படும் முப்பத்திரண்டு வித்தைகளும், ஒருவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதன் முன்னர், அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு நெறிகளின் வடிவங்களாம். ஆகமங்களின், முதலாவதும், இரண்டாவதுமான நூல்கள் (சரியை, கிரியை) சிவன் அல்லது விஷ்ணுவை வழிபடுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் பக்தி நெறியின் கட்டுப்பாட்டு நிலைகள், பல இடங்களில் யோகப் பயிற்சி வடிவிலான தத்துவார்த்த கடமைகளையும், உடன்கொள்ள வேண்டியிருப்பதால், ஆகமங்களின் மூன்றாவது நூல், யோகநிலை பற்றிக் கூறுகிறது. ஈண்டு ஞானம் எனக்கூறப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட. ஞானம் அன்று. மாறாக, ஆகமநெறிக் கோட்பாடுகளில் புதையுண்டுகிடக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை விளக்குவது என்ற பொருள் உடையதாகும். இந்தத் தத்துவம், வேதாந்தத் தத்துவத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. காரணம், பின்னது, இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால், ஒரேயொரு உண்மைப் பொருளை மட்டுமே, அதாவது பிரம்மாவை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொள்கிறது. முன்னது, முப்பொருள் உண்மைகளை (“தத்வ த்ரயம்”) அதாவது, ஈஸ்வரன், தனிமனிதன், செயல் ஆகியவைகளை, உண்மைப் பொருள்-