பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

265


கடியுடை வியன்நகர்க் கானவர் துஞ்சார் ;
வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை
கன்முகைச் சிலம்பில் குழுமும் , அன்னோ !
மென்தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்,
வாரார் ஆயினோ நன்றுமன் : தில்ல;
உயர்வரை அடுக்கத்து ஒளிருபு மின்னிப்
பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி.அரவு தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஒங்கு வரை யாறே‘’

- -நற்றிணை : 255

மலைநாட்டு மகளிரின் கடமைகளுள் ஒன்று, தினை, கதிர் முற்றும் பருவத்தில் அத்தினைப்புனத்தைக் காத்தல் ஆகும். அதனால்தான், தங்கள் காதலர்களை எளிதில் சந்திக்கும் வாய்ப்பு அம்மகளிர்களுக்குக் கிடைத்துவிடுகிறது: தினை முற்றி அறுவடைப்பருவம் வந்துற்றதும், இம்மகளிர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுப், புறம் போகவிடாது காக்கப் படுவர். இது, இற்செறிப்பு எனப்படும். அவ்வாறு: இற்செறிக்கப்பட்டாள் ஒர் இளம்பெண்ணின் தோழி இவ்வாறு புலம்புகிறாள் : "தோழி ! தினையின் கதிர்கள் எல்லாம், விரிந்த அலைகளையுடைய கடல் வற்றிவிட்டாற்போலக் காய்ந்து கொய்யும் பருவம் அடைந்துவிட்டன : அந்நிலையை நீ காண்பாயாக இனி, நமர், அவற்றைக் கொய்துகொண்டு போவதல்லாமல், உன்னை வீட்டில் இட்டு வெளியே போகா வண்ணம் காப்பதும் செய்துவிடுவர். அது உறுதி, போன் போலும் நிறம் வாய்ந்த மலர்களால் நிறைந்து வேங்கை மரங்கள் வளர்ந்து மணம் நாறும் மலைச்சாரலில், பெரிய மலைநாட்டுக்கு உரியோனாகிய காதலனோடு, தினைப் புனத்தில் தங்கியும் சிவந்த வாய்களை உடையவாகிய கிளிகளைத், தினைக்கதிர்களைக் கொய்து செல்லாவாறு. ஒட்டியும், அடுத்திருக்கும் கரிய மலைச்சாரலில் உள்ள அருவியில் நீர்விளையாடல் புரிந்தும், மலைச்சாரலில் வளர்த்து