உலக நாடுகளில் தமிழர்
99
பட்டன. தமிழ் நாட்டில் தமிழுக்காக ஒரு தனி இயக்குநர் கிடையர்து. ஆனால் இலண்டனில் தமிழுக்காக ஒரு தனி இருக்குநர் (துணை) இருக்கிறார். அவர் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்தவர்.
பல்கலைக் கழகம் விடுமுறையான காரணத்தினால் நான் செல்ல முடியவில்லை. துணை இயக்குநர் நான் தங்கியிருந்த இடத்திற்கே வந்தார். ஒருநாள் மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரை (நான்கு மணி நேரம்) பேசினோம். அவர் தமிழ்நாட்டில் தமிழ் எந்தெந்த, வகையில் செயல்படுகிறது என்பதையும், தமிழ் நாட்டில் அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற வந்தபோது, அவர்களுக்குச் சரியான ஒத்துழைப்பினைத் தரவில்லை. என்பதையும் கூறிக் கண்ணீர் வடித்தார். தமிழுக்காகப் பள்ளிக்கூடங்கள் இல்லையென்றாலும் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கிறது என்று கூறினார்.
இலண்டனில், ‘தமிழ் நாட்டு அமைச்சர்கள். தலைவர்கள், புலவர்கள் வருகிறார்கள், நாங்கள் சொன்னால் செய்வோம் என்பார்கள்; போன பின் பதில் கூடப் போடுவதில்லை’ என்று வேகத்தோடு பலர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டு அனைத்துக் கட்சிகளும் இலண்டனில் உள்ளன. அங்கும் ஒற்றுமையில்லை.
அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைக் கடந்து. நியூயார்க்கில் ஒரு வாரம் தங்கினேன். அங்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கிடையாது. அங்கு ஓர் அருமையான பொருட்காட்சிச் சாலை இருக்கிறது. (Museum of Natural. Science). அங்கு உயிர் வளர்ச்சி, நில வளர்ச்சி, பிற வளர்ச்சிகளைப் பற்றிப் பிற நாடுகளில் காணமுடியாத, அளவிற்குப் பெரிய காட்சியைக் கண்டேன்.
நாம் பழங்காலத்தைப் பற்றிப் படித்த பல காட்சிகள் நிதரிசனமாகக் காணப்படுகின்றன. உயிர்த்தோற்ற வளர்ச்சியைப் பற்றி அழகாகத் தேவையானவற்றைப்