உலக நாடுகளில் தமிழர்
97
அந்த அறையில் திருவள்ளுவர் படம், பரந்த தமிழ் ஆநாட்டுப் படம், பாரதிதாசனார் பாடல்கள் முதலியன இருந்தன. அவர் துணையினால் பாரிஸில் பிற பகுதி களைச் சுற்றிப் பார்த்தேன்.
அடுத்து உரோமுக்கு வந்து போப்பாண்டவரை மிக அருகிலிருந்து பார்த்தேன். உரோம் நகரில் ஒரு தமிழ் ஒலிபரப்பு முறை இருக்கின்றது. இலண்டனில் இருப்பது பலருக்குத் தெரியும். பி. பி. சி. என்று; ஆனால் இது பலருக்கும் தெரியாது. அதனை நடத்துபவர் நம் ஊரைச் சேர்ந்த இராசன் என்பவர். அவர் ஒரு நேர்முகப் பேட்டிக்கு ஏற்பாடு செய்ய விரும்பினார். நேரமில்லாத தால் குறிப்பு மட்டும் எழுதிக் கொடுத்தேன்.
அங்குள்ள சிற்பங்கள், அகழிகள் மதில்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக் கட்டடக் கலையின் சிறப்பு உள்ளது. அங்குள்ள இடுகாட்டினைப் பார்த்தபோது அது எனக்குப் பழந்தமிழ் நாட்டு முறையை நினைவுபடுத்தியது.
அங்கிருந்து இலண்டனுக்குச் சென்றேன். அங்கு இந்தியக் கிறித்துவ சங்கத்தில்தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். அதன் தலைவரும் செயலாளரும் தமிழ் நாட்டவர்க்ளே. அங்கு இந்தியநாட்டு மாணவர்களுக்கு அருமையான தமிழ்நாட்டு உணவே தரப்படுகிறது. அவர்கள். நல்ல பயிற்சியும் பெறுகிறார்கள். தமிழ்ச் சங்கமும் உண்டு. அங்குள்ள தமிழர்களைத் தமிழ் வெறியர்கள் என்றே கூறலாம்.
அங்கே தமிழ்நாடு என்று பெயரிட்டு ஒரு படம் வரைந்திருக்கிறார்கள். திங்களிதழ் ஒன்றும் வெளியிடுகிறார்கள். திரு.வி.க. மலர் போன்ற பல மலர்களும் வெளியிடுகிறார்கள். மலர் ஒன்றில் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்திரத்தின் பாடல்களைப் பாராட்டியுள்ளனர். அவரைப் பற்றித் தனியான கட்டுரை எழுதிப் படத்துடன் வெளியிட்டுள்ளனர். தமிழ் மரபினைக் காக்கவேண்டும்