பக்கம்:தமிழின் வெற்றி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍器 தமிழின் வெற்றி

குழப்பமான் கிலேயை மாற்றவேண்டும் என்று எண்ணினர் வன்பரணர். * -

"வள்ளற் பெருமானே!" என்று வன்பரணர் பேசத் தொடங்கினர். எல்லோர் முகங்களும் அவரை நோக்கித் திரும்பின.

' பானர் தலைவர் இப்போது மருதம் வாசித்த தற்கு ஏதாவது தக்க காரணம் இருக்கும். ஆலுைம் காலமல்லாத காலத்தில் இந்தப் பண்ணே வாசித்தது. அவருடைய புலமைக் குறை யென்று தோற்ற வில்லை. அதற்கு மூலகாரணம் தங்களுடைய வள்ளன்மைதான்' என்ருர் புலவர்.

புலவர் என்ன சொல்லப் போகிருர் என்று எல்லோரும் கூர்ந்து கவனித்தனர்.

கலைஞர்களைப் போற்றிப் பாராட்டி உண. ஆட்டி ஊக்கமளிப்பதே தங்களுடைய வாழ்க்கையின் முதற் கடமையாகக் கொண்டிருக்கிறீர்கள். நாங்க ளெல்லாம் வறுமையோடு உறவாடுகிறவர்கள். காலு பேரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணுவோம். சும்மா பார்க்கலாமா? கற்ற வித்தையைக் காட்டிப் பரிசு பெறவேண்டும். ஆதலால் எப்போதும் மேலும் மேலும் பயிற்சி செய்துகொண்டே இருப் போம்.' . . . - - -

புலவர் என்ன சமாதானம் சொல்லப் போகிருர் என்று இன்னும் ஒருவருக்கும் புலப்படவில்லை. அவர்களுடைய ஆவல் அதிகமாகிக் கொண்டே வநதது. . இங்கே நாங்கள் வந்துவிட்டால் வேளேக்கு வேளை அளவுக்கு மிஞ்சிய உணவு. அதைச் சாப் விட்டால் உடனே இளைப்பாற வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/28&oldid=574793" இலிருந்து மீள்விக்கப்பட்டது