உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பெண்ணை தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கி விடுவது. இரவு நேரத்திலே மாத்திரம் தன்னுடைய பள்ளியறைக்குச் சென்று வெளியே துப்புவது. பிறகு இருவரும் பள்ளியறையிலே இன்பமாக இருப்பது. இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடை பெற்று வருகின்ற எமலோகத்து காதல் காட்சி ! ஒரு நாள் குளிப்பதற்காக நீரோடைக்குச் செல்லு கிறான் எமன். குளிக்கிற நேரத்திலே வயிற்றுக்குள்ளே மப்புமந்தாரம் இருக்கக் கூடாதல்லவா.? எனவே, பக்கத்திலே இருந்த பளிங்கு மண்டபத்திலே அந்தப் பெண்ணைத் துப்பி உட்கார வைத்துவிட்டு, இங்கேயே இரு. குளித்துவிட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் று போய் குளித்தான். அக்கினி அந்த நேரத்திலே அந்தப் பக்கமாக பகவான் வருகிறான். வந்தவன், பளிங்குமண்டபத்திலே இருக்கிற பாவையைப் பார்த்துவிடுகிறான். உடனடியாக அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. அவளும் சம்மதித்து விடுகிறாள். இருவரும் அந்தப் பளிங்குமண்டபத்திலே இன்பமாக இருக்கிற நேரத்தில் எமன் குளித்துவிட்டு அந்த வழியாக வருகிறான். அவன் பார்த்து விட்டால் ஆபத்து ஆயிற்றே என்று பயந்த அந்தப் பருவமங்கை, எமனை ஏமாற்று வதற்காக அக்கினி பகவானைத் தூக்கி தன்னுடைய வயிற்றிலே போட்டு விழுங்கி விடுகிறாள் எமன், இவை எதுவும் தெரியாதவன் - பாவம், அவளை வழக்கம்போல் தன்னுடைய வயிற்றிலே தூக்கிப் போட்டு விழுங்கி விடுகிறான். அக்கினி பகவானைத் தேடிக்கொண்டு வந்த வாயு பகவான், எங்கே நண்பனைக் காணவில்லையென்று உலகமெல்லாம் தேடத் தொடங்கி விட்டான். இப்பொழுது ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்