பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தமிழியக்கம்

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
    வருந்தீமை உனக்குவரும்
        தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திருநீ
    இளந்தமிழா, வரிப்புலியே,
        பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம்செய்!
    அறத்தைச்செய்! விடுதலைகொள்
        அழகு நாட்டில்!
பணிசெய்வாய் தமிழக்குத்
     துறைதோறும் துறைதோறும்
        பழநாட் டானே.14

எதுசெய்ய நாட்டுக்கே
    எனத்துடித்த சிங்கமே!
        இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித்
    தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
        கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
        அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க
    எப்பணிக்கும் முதற்பணியாம்
        எழுக நன்றே. 15