பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭. அரசியல்சீர் வாய்ந்தார் (2)

தெலுங்குதமிழ் நாட்டினிலேன்?
    செத்தவட மொழிக்கிங்கே
        என்ன ஆக்கம்?
இலங்கும் இசைப் பாட்டுக்கள்
    பிறமொழியில் ஏற்படுத்த
        இசைய லாமோ?
நலங்கண்டீர் தமிழ்மொழியால்
    நற்றமிழை ஈடழித்தல்
        நன்றோ? சின்ன
விலங்கதுதான் சோறிட்டான்
    மேற்காட்டும் நன்றியைநீர்
        மேற்கொள் ளீரோ? 31

பொதுமையிலே கிடைத்திட்ட
    செல்வாக்கை இனநலத்துக்
        காக்கு வோரை
இதுவரைக்கும் மன்னித்த
    எழில்தமிழர் இனிப்பொறுப்பார்
        என்பதில்லை!
குதிகாலும் மேற்செல்லும்
    அடுத்தபடி கீழேதான்
        வந்து சேரும்
அதுவியற்கை! மலைக்காதீர்!
    அறிவுநாள்இது! கொடுமை
        அழிந்தே தீரும்.32

அரசியலார் அறிக்கையிலும்
    சுவடியிலும் தமிழ்ப்பெருமை
       அழித்தி டக்கை
வரிசையெல்லாம் காட்டுவதோ?
    வடமொழியும் பிழைத்தமிழும்
       பெருகி விட்டால்
வருநாளில் தமிழழியும்
    வடமொழிமே லோங்கமெனும்
       கருத்தோ? நாட்டில்
திருடர்களை வளரவிடும்
    ஏற்பாடோ ? செல்லுபடி
       ஆகா திங்கே. 33