பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுத்திரு !
பொன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய் !

—பாரதிதாசன்

தமிழ்நாட்டிலே தமிழ் தாழ்மைப் படுத்தப்பட் டிருக்கிறது! இது தமிழர்கட்கு அவமானம் இல்லையா? தமிழ் பிறரால் தாழ்மைப் படுவது ஒரு புறம், தம்மைத் தமிழரென்று சொல்லிக் கொண்டு, பிறமொழிக்கு அடிமையாகித் தமிழைத் தாழ்த்துகின்ற கூட்டத்தின் செயல் மற்றொரு புறம், இந்தத் திருப்பணி அறிந்தும்— அறியாமலும் நடைபெறுகிறது. இந்த இரு சாரார்களிடையே தமிழ் நலிவுறுகிறது ! இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை!

சென்ற ஆண்டு கானாடுகாத்தான் ‘இன்ப மாளிகை’யில் கவியரசர் அவர்கள், ஓரிரவு முழுதும் இமை கொட்டாதிருந்து பல கருத்துக்களை எடுத்துக்கூறினார்கள். அந்தக் கருத்துக்களைப் பாக்களாக்க வேண்டினேன். கவியரசர் அவர்கள் ஆக்கித் தந்தார்கள். அதுவே இந்தத் தமிழியக்கம்!

இந்நூலை ஊன்றிப் படிப்பார்க்குப் பல உண்மைகள் தெரியவரும்.

கவியரசர் அவர்கள் பொருளுக்கும் —புகழுக்கும் அடிமையல்லர். உண்மைக்கு உழைக்கும் உயர்ந்த தகைமையாளர் என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டாகும் !

கவியரசர் கூறுகின்ற புரட்சி தமிழ்த் துறையிலே ஏற்படுமானால் 'தமிழின் சீர்இளமைத்திறம், செயல் மறந்து வாழ்த்தப்பெறும்.

ப. முத்தையா