கண்
(ஓ) கண் சிவத்தல் Kan civattal.
(22) சினம் - anger
'ஓடரி சிதறிய ஒள்ளரி மழைக்கண்
ஊடெரி உமிழும் ஒளியே போலச்
சிவப்பு உள்ளுறுத்துச் செயிர்ப்பு
முந்துறீஇ' (பெருங். இலா. 16: 16-18)
(ஓ) கண்ணிடனாடல் (ஆண்)
Kannitanital
(23) தீமை, துன்பம் - evil omen
வயிரம் வேய்ந்தமணி நீண்முடி
வாலொளி வானவன் செயிரில்
தீர்ந்த - செழுந்தாமரைக்
கண்ணிடனாடலும் உயிரனானை
நினைந்தானுற்ற தோதியி
னோக்கினான் மயிலனார்க்குப் படி -
வைத்தவன் மால்விசும்பேறினான்'
(சீவக.4: 1156) -
(ஔ) கண் வலனாடல் (ஆண்)
Kan valanatal |
(24) நன்மை - good omen
'நெறியின் நல்கின புள்ளும்
நிமித்தமும்; இறைவன் கண் வலன்
ஆடிற்று இயைந்தரோ' (சீவக.2168:
3-4)
(க) கண்களில் நீர்த்துளி
தோன்றுதல் Kankalil nirttuli tonrutal
(tear in eye)
(25) துன்பம் - Sorrow
போதன புணரரி நெடுங்கண்
புனல்வரப் பூந்துகிற் புடையா
வேதனை பெரிதுடைத் தடிகள்
விளிகவிப் பிறப்பென
உரைத்தாள்' (நீலகேசி.73:3-4)
(ங) திருக்கண் (நெற்றிக்கண்)
Tirukkan
அழிவு
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட
முதல்வர் மதனன்றன் தென்நீர்
உருவம் அழியத் திருக்கண் சிவந்த
நுதலினார்' (திருஞான தேவா.3461:
1-4)
(ஒப்பு) Eye அறிவாற்றல், அன்பு,
ஆன்ம பலம், உரிமை, உலகம்,
உள்ளுணர்வு, ஒற்றர், சன்னல்,
கண்டிகை
தியானநிலை, - நிலைபேறு, நீதி,
பாதுகாப்பு, புரிந்து கொள்ளும்
திறன், வாழ்வு, விழிப்புணர்வு.
நெற்றிக்கண் - அழிவு. .
நீல நிறக் கண்கள் - அறியாமை,
கருவுற்றிருத்தல், காதல்,
சிற்றின்பத் தோய்வு, வானுலகக்
கடவுளர்.
பச்சை நிறக் கண்கள் - சிறந்த
நம்பிக்கை, நம்பிக்கைக்கு ஒவ்வாத
நிலை, பொறாமை, வளமை.
சிவப்பு நிறக் கண்கள் -
அழுகை, எரிதல், குடிப்பழக்கம்,
நெருப்பு,
ஒரு கண் - ஒளி, சுடும்
இயல்பு, மனித நிலைக்குக்
கீழ்ப்பட்ட தன்மை,
இரு கண்கள் - இரட்டைத்
தன்மை, உடல் மற்றும் ஆன்மா.
மூன்று கண்கள் - கடவுள்
தன்மை, செயலறிவு, படைப்பு.
பல கண்கள் - இரவு, மற்றும்
விண்மீன்கள்.
கண்கட்டு - அடிமைத்தனம்,
அறியாமை, குருடு, நடுநிலைமை.
வலது கண் - சூரியன் மற்றும்
எதிர்காலம்.
இடது கண் - சந்திரன் மற்றும்
இறந்த காலம்,
கண்டல் Kantal (a plant)
(1) பாதுகாப்பு - safety
'கண்டல் வேலி நும் துறை
கிழவோற்கே ' (நற்.54:11)
கண்டிகை Kantikai (an ornament)
(1) அழகு - beauty
'காமர் கண்டிகை தன்னொடு
பின்னிய தூமணித் தோள்வளை
தோளுக்கு அணிந்து' (சிலப்.6: 89-
90)
(ஆ) கண்டிகை ஆரம் Kantikai
aram
(2) துறவு - renunciation
'ஆரம் கண்டிகை ஆடையும்
கந்தையே பாரம் ஈசன் பணி அலது
ஒன்றிலார்' (பெரிய, 144: 1-2) -