தகரம்
ஆட்டுக்குட்டி - - அறியாமை,
அமைதி, இனிமை, எளிதில்
வசப்படுத்தக்க நிலை, குறும்பு,
தன்னடக்கம், தியாகம், தூய்மை,
பணிவு, மன்னிக்கும் மனநிலை.
பலியாடு - கண்டனம், தண்டனை,
பாவ நிராகரிப்பு.
தகரம் Takaram (வாசனைப்பொருள்)
(1) நறுமணம், இன்பம்
'தகர நாறிருஞ் சோலைச்
சயம்பூறான்' (சூளா, 1810: 1)
தண்டு Tantu (rod)
(1) ஆதரவு - support
'இடையன் .......
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை
மடி விளி' (நற்.142: 4,6)
(ஆ) கதை, சக்கரம், வாள், வில்
போன்ற போர்க்கருவிகள் தாமே
போர் செய்தல் Katai, cakkaram, val,
vil ponra porkkaruvikal tamé por ceytal
(2) அழிவு, தீமை – evil omen
'தண்டோடுதிகிரி வாள் தனு
என்று இன்னை மண்ட அமர்
புரியுமால் ஆழி மாறு உற'
(கம்ப.சுந்.375:3-4)
தண்ணம் Tannam
(1) இறப்பு
'இழைத்தநாள் எல்லை இகவா
பிழைத்தொரீஇக் கூற்றம்
குதித்துய்ந்தார் ஈங்கில்லை ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர்
வழங்குமின் நாளைத் தழி இம்
தண்ணம் படும்' (நாலடி.6)
தந்தை tantai (father)
(1) மேன்மை - Superiority, excellence
'.. .. .. மேதக்க தந்தை
யெனப்படுவான் தன்னுவாத்தி
தாயென்பாள் முந்துதான் செய்த
வினை ' (நான். 45:2-4)
தமனகம் (மருக்கொழுந்து) Tamanakam
(1) பச்சை நிறம்
தயிர்
'பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்
பூச் சூட்ட வாராய்' (நாலா.184: 7-
8)
தமிழ் Tamil)
(1) நன்மை - goodness
இரு பாற்படுக்கும் நின் வாள்வாய்
ஒழித்ததை அதூஉம் சாலும் நல்
தமிழ் முழுது அறிதல்'
(புறம். 50:9-10)
(2) நிலைபேறு - stable, everlasting
'தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு
மரபின்' (சிறுபா. 66)
(3) ஈடிலா இனிமை -- unmatched
sweetness
'முனிந்தார் முனிவொழியச்
செய்யுட்கண் முத்துக் கனிந்தார்
களவியற் கொள்கைக் கணிந்தார்
இணைமாலை ஈடிலா இன் தமிழால்
யாத்த திணைமாலை கைவரத்
தேர்ந்து'
(திணைமாலை பாயிரம். 154)
(4) வளமை - flourishing
'வண் தமிழைத் தேர்ந்த வழுதி
கலியாணத்து' (தனிப்.69: 1)
தயரதன் Tayaratan (a king)
(1) கொடை, வள்ளன்மை
'தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன்
கதை' (கம்ப.பால. 1: 1-2)
தயிர் Tayir (curd)
(1) இனிமை
'தீம் தயிர் கடைந்த திரள் கால்
மத்தம்' (அகம். 87:1)
(2) வெண்மை
'வேளை வெண்பூ வெண் தயிர்
கொளீஇ ' (புறம். 215:3)
(3) தண்மை
'தாழி தரை ஆக தண் தயிர் நீர்
ஆக' (கம்ப.ஆரண்.100: 5)
(4) நிற்றல்
'உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பால் தயிர் மோர்
பருவத்தினாம் பரியாயப்
பெயரென்பன் பாலழிந்து
தருவித்து உரைத்த தயிர் உருவாய்
மும்மைத் தன்மையதாம்
திருவத்ததென் பொருளாதலைத்
143