பொன் நிறம்
(ஆ) முகலி Mukali
(3) செல்வம் - treasure
'திரைகள் திரட்டி வைத்த
திருமுகலியினைச் சார்ந்தார்'
(பெரிய, 10.98)
பொன் நிறம் Pon niram (gold colour)
(1) வணிகர் - merchants
பொன்மலர்க் கண்ணியர்
பொன்செய் சுண்ணமொய்
மின்மலர் மேல் விளங்க
அப்பினார் மென்மலர் அணிநகை
மிளிரும் கோலமோடு இன்மலர்
இருநிதிக் கிழவர் -ஈண்டினார்'
(சூளா .1878)
பொன்னி Ponni (a river)
(1) இறைச்சார்பு - devine
'திங்கள் சூடிய முடிச்சிகரத்து
உச்சியில் பொங்குவெண்
தலைநுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றே
இழி கங்கையாம் பொன்னியாம்
கன்னி நீத்தமே' (பெரிய.55)
(2) புனிதத்தன்மை - holy
'பொன்னி நல்நதி மிக்க நீர்
பாய்ந்து புணரி தன்னையும்
புனிதம் ஆக்குவதோர்'
(பெரிய 404: 5-6)
(3) கடவுட்டன்மை - divinity/ godhood
'அணங்கு நீர்ப்பொன்னி ஆடி
நான்' (பெரிய.514:3)
போதி Poti (pipal tree)
(1) துறவு - asceticism/ renunciation
'போதியின் கீழ் மாதவர் முன்
புண்ணிய தானம் புரிந்த மாதவி
தன் துறவும் கேட்டாயோ தோழீ'
(சிலப்.29:9-10)
(2) பௌத்த சமயம் - Buddhism
'சங்க போதியி லாள்கட்
டயாச்செய' (நீலகேசி.245: 2)
(3) புத்தர், ஞானம் - Buddha,
enlightenment
'போதி யாயுரு வெய்திய புற்கலர்'
(நீலகேசி.248: 1)
போது Potu (bud)
போந்தை
(1) பரத்தையர் - prostitute
'போதார் வண்டூ தும் புனல்வயல்
ஊரற்குத் தூதாய்த் திரிதரும்
பாண்மகனே ' (ஐந்.ஐம்.22: 1-2)
போந்தை Pontai (palmyrah palm)
(1) அரசக்குறியீடு - royal sign-totem
'போந்தை வேம்பே ஆர் என
வரூஉம் மாபெருந் தானையர்
மலைந்த பூவும்' (தொல்.1006: 4-5)
(2) வீரம் - valour
'மறம் கெழு போந்தை வெண்
தோடு புனைந்து' (பதி.51:31)
(3) வன்மை | வலிமை - might
'நெடு வேல் பாய்ந்த மார்பின்
மடல் வன் போந்தையின்,
நிற்குமோர்க்கே ' (புறம்.297:9-10)
(4) செழிப்பு - fertile
'வேம்பும் ஆரும் போந்தையும்
மூன்றும் மலைந்த சென்னியர்'
(புறம்.338: 6-7)
(5) சேரன் - cera king
'இரும் பனம் போந்தைத் தோடும்'
(பொரு.143)
(ஆ) பெண்ணை Pennai
(6) கடவுட்டன்மை - divinity/ godhood
தொன்று உறை கடவுள் சேர்ந்த
பராரை மன்றப் பெண்ணை
வாங்கு மடற் குடம்பை
(நற்.303: 3-4)
(இ) பனை Panai
(7) உயர்வு - lofty, eminent
'அடும்பு இவர் மணற்கோடு ஊர,
நெடும் பனை குறிய ஆகும்'
(குறு.248: 5-6)
(8) பேரளவு - large, big
'தினைத் துணை நன்றி செயினும்
பனைத் துணையாக் கொள்வர்
பயன் தெரிவார்' (குறள். 104)
வன்மை - mighty
'மெய்ம்மையே நின்று மிகநோக்கப்
பட்டவர் கைம்மேலே நின்று
கறுப்பன செய்தொழுகிப்
பொய்ம்மேலே கொண்டவ்
விறைவற்கொன்றார் குறைப்ப
தம்மேலே வீழப் பனை '
(பழமொழி. 280) |
276