பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

167



வகை இயல்பிகந்த தன்மைகள் அல்லது குறைகள் உண்டாகின்றன. இயற்கையின் வினோதத்தால் நம்மாழ்வார் இறைவனுக்குக் கூறும் 'ஆணல்லன், பெண்ணல்லன், அலியு மல்லன்’ என்ற தன்மையுள்ள ஏதோ ஒரு குழவி தோன்றுகின்றது. இதனை விளக்க நேரம் இல்லை.17

3. இரட்டைப் பிறவிகள்: கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய உயிரணுக்களிலிருந்து மானிட உயிர் தோன்றுவதும் பல்வேறு சிக்கலான அமைப்புகளையும் பண்புகளையும் கொண்ட ஒரு மனிதன் உருப்பெறுவதும் வியப்பேயாகும். அதே சிறிய உயிரணுவிலிருந்தே இரண்டு, மூன்று நான்கு என்று சில சமயம் ஒரே மாதிரியான பல குழவிகள் தோன்றுவதைக் காணும்பொழுது நம்முடைய வியப்பு பன்மடங்கு அதிகரிக்கின்றது. இயற்கையின் இரகசியம் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருப்பதைக் கண்டு இறும்பூது அடைகின்றோம். ஈண்டு இரட்டைப் பிறவிகள் முதலியவை தோன்றுவதை விளக்குவேன்.

ஒரு கரு இரட்டையர் (Identical twins): இவ்வகையில் ஒரே முட்டையிலிருந்து இரண்டு குழந்தைகள் உண்டாகின்றன. கருவுற்ற முட்டை பிரிவுபட்டு உண்டான கருப்பத்தில் உள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒல்வொரு குழந்தையாக வளரும். ஏன் அஃது இவ்வாறு பிரிகின்றது? என்பது இயற்கையன்னையின் பல விளங்காப் புதிர்களில் ஒன்றாகும். வளர்ச்சியின் முதல் நிலையில் எல்லா உயிரணுக்களுக்கும் குழந்தையின் எல்லாப் பகுதிகளாக வளரும் ஆற்றல் உண்டு. இவ்வாறு பிறக்கும் குழவிகளின் தோற்றம், தன்மை, உயரம், நிறம், உறுப்புகளின் அமைப்பு முதலிய மரபுவழிக் கூறுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது பெண்ணாக இருக்கும். அஃதாவது இவ்வகைக் குழவிகளில் பால் வேற்றுமை இராது. நாடளாவிய புகழ் பெற்ற நம் ஆற்காட்டுச் சகோதரர்கள்18 ஒரு கரு



17. 'வாழையடி வாழை' என்ற என் நூலில் (மணிவாசகர்

நூலகம், சிதம்பரம் - 1) இயல் - 28 காண்க.

18. டாக்டர் ஏ.எல். முதலியார்; திரு. ஏ.ஆர்.முதலியார்.